நரேந்திர மோடியின் துணிச்சலான நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவு உள்ளது

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சலான நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவுஉள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.


அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் திங்கள் கிழமை பாஜக தொண்டர்கள் மத்தியில் அவர் பேசிய தாவது: கருப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் முக்கிய முயற்சியாக, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாபஸ்பெறும் அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி கடந்தமாதம் வெளியிட்டார். அவரது இந்த துணிச்சலான முடிவை நாட்டுமக்கள் பெருவாரியாக ஆதரவு அளித்துள்ளனர். இதற்காக பொது மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


கருப்புப்பணத்தையும், ஊழலையும் ஒழிக்கவேண்டும் என்பதில் எவ்வித சமரசமின்றியும், சந்தேகத்துக்கும் இடமின்றி மத்திய அரசு போராடிவருகிறது.


ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்குப்பிறகு மக்கள் பலசிரமங்களை எதிர்கொண்டது உண்மைதான். ஆனால், இப்போது நிலைமை சீரடைந்து வருகிறது. ஏடிஎம் வாசல்களில் மக்கள் சிலமணிநேரம் காத்திருந்தது உண்மை தான். ஆனால், இதுதொடர்பாக மக்கள் கருத்து தெரிவித்தபோது, "நமது தேசத்தை எதிரிகளிடம் இருந்து காக்க எல்லையில் நமதுவீரர்கள் உயிரை தியாகம் செய்து வருகின்றனர்.

அதனுடன் ஒப்பிடும்போது ஏடிஎம் வாசல்களில் சிலமணி நேரம் காத்திருப்பது நாட்டுக்காக செய்யும் பெரியதியாகம் இல்லை' என்றுதான் கூறியுள்ளனர்.


மத்திய அரசின் திட்டங்களால் ஏழைகளும், விவசாயிகளும் அதிகம் பயனடையவேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. இப்போது தான் இந்தியா உண்மையான வளர்ச்சியை நோக்கிப்பயணிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய – வங்கதேச எல்லைவரும் 2018-ஆம் ஆண்டில் முழுமையாக மூடப்படும். அஸ்ஸாம் மாநில மக்களின் தனியுரிமையைக் காப்பதில் பாஜக முழு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது என்றார் ராஜ்நாத் சிங்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...