இந்த சோதனையான நேரத்தில் துணை நின்ற 100 கோடி இந்தியர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன்

பிரதமர் நரேந்திரமோடி டிவி வாயிலாக இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், வங்கியிலும், ஏடிஎம்களிலும் பணம் எடுக்க மக்கள் பட்டகஷ்டங்களுக்கு நன்றி தெரிவித்து பெருமிதம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

நாட்டு மக்கள் ஊழலுக்கு எதிரான மனநிலையில் உள்ளார்கள். தீமையை அழிக்க மக்கள் சபதம் ஏற்றால் விளைவுநன்றாக இருக்கும் என்பதற்கு நமது நாடு உதாரணம். நவம்பருக்குபின் புதிய சவால்கள் மக்களுக்கு காத்திருந்தன. ஆனால் ஊழல் பிரச்சனைகளை அகற்ற போராடுகிறோம் என்ற உணர்வு அனை வரையும் ஒன்றிணைத்தது.

ஊழலை ஒழிக்கவும் ஏழைகள் நலம்பெறவுமே பண மதிப்பிழப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், நேர்மை மரபு காப்பாற்றப் பட்டுள்ளது. ஊழலை ஒழிக்கும் மனநிலையில் மக்கள் உள்ளனர். கறுப்புபணம், கள்ளச்சந்தை, விலை வாசியால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

கறுப்புபண ஒழிப்பால் நீண்ட நாட்களுக்கு பயன் கிடைக்கும். எனவேதான், பணமதிப்பிழப்புக்கு நாட்டுமக்கள் ஆதரவு தந்து வருகிறார்கள். பணப் பற்றாக் குறை கிராமங்களில் விரைவில் சரி செய்யப்படும். வங்கிகள் விரைவில் இயல்பு நிலைக்கு வரும்

பணபரிமாற்றத்தை மக்கள் நிறுத்த வேண்டும். டிஜிட்டலுக்கு மாறவேண்டும். மக்களின் பணம் வங்கிக்கு வந்தால் நாட்டுக்கு வளர்ச்சிகிடைக்கும். காமராஜர் போன்ற தலைவர்கள் இருந்திருந்தால் மக்களை பாராட்டுவர். ஏழைகளை முன்னேற்ற இதுபோன்ற நடவடிக்கைதேவை. இந்தியர்கள் தியாகமும், பொறுமையும் உலகிற்கே ஒரு உதாரணம்.

 

பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் தவறுசெய்த வங்கி அதிகாரிகளை நாங்கள் விட்டுவைக்க மாட்டோம். சாமானிய மக்களுக்கும் அதிகாரம் கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தான் போராடி வருகிறோம்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர். அரசு கொண்டுவந்த வருமான ஒப்புதல் திட்டத்தில் ரூ10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளது என மொத்தம் 24 லட்சம்பேர்தான் ஒப்புக் கொள்கின்றனர். தற்பொழுது அரசு எடுத்த நடவடிக்கை தேசத்தின் வருங் காலத்துக்கு மிகவும் பயன்தரும்.

இந்த சோதனையான நேரத்தில் துணை நின்ற 100 கோடி இந்தியர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்போது பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அதில் முக்கியத்துவம் வாய்ந் சில அம்சங்கள்:

*மூத்த குடிமக்கள் ரூ.7.5 லட்சம் 10 ஆண்டுகளுக்கு டிபாசிட்செய்தால் 8 சதவீதம் வட்டிவழங்கப்படும்
 
*கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால செலவுக்காக உதவும் வகையில், மத்திய அரசு சார்பில் ரூ.6000 உதவித் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்இந்த திட்டம் நாடு முழுக்க முதல் கட்டமாக 650 மாவட்டங்களில் கொண்டுவரப்படும்.
 
*சிறு குறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன்வழங்கப்படும். சிறு வணிகர்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும்.
 
*சொந்த வீடுகட்டுபவர்களுக்கு 9 லட்சம் ரூபாய்வரை 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும். ரூ.12 லட்சம் வரை கடன்பெறுவோருக்கு 3% வட்டி விலக்கு அளிக்கப்படும்.
 
*விவசாயிகளின் குறிப்பிட்ட சிலகடன்களின் 60 நாட்களுக்கான வட்டியை அரசே ஏற்கும். வங்கிக்கடன் பெற்று விதைக்கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 60 சதவீதம் வரிச்சலுகை அளிக்கப்படும்.
 
*சிறிய வர்த்தகத்திற்கான ரொக்க கடன்வரம்பு 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்படும்.

.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...