டெல்லி போலீசில் 15 ஆயிரம்பேரை சேர்ப்பதற்கான ஒப்புதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என மத்திய உள்துறைமந்திரி ராஜ்நாத்சிங் இன்று கூறியுள்ளார்.
இந்த விரிவாக்கம் நடைமுறைக்கு வந்தபின் டெல்லிபோலீசாரின் எண்ணிக்கை 1 லட்சம் ஆக இருக்கும்.
புது டெல்லியில் காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுவழங்கும் நிகழ்ச்சி பெரியளவில் நடந்தது. இதில் 24 அதிகாரிகளுக்கு விருதுவழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி போலீசாரின் எண்ணிக்கை போதியளவில் இல்லை என நான் கருதுகிறேன். அது அதிகரிக்கப்பட வேண்டும்.
15 ஆயிரம்பேரை பணியில் அமர்த்தவேண்டும் என்ற ஒப்புதல் உள்துறை அமைச்சகத்தினால் அனுமதி அளிக்கப்பட்டு நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புதல் மிகவிரைவில் கிடைத்து விடும் என நான் நம்புகிறேன் என கூறினார்.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.