பட்ஜெட் கூட்டத்தை தள்ளி வைக்குமாறு தோல்விபயத்தில் எதிர்கட்சி தலைவர்கள் பிதற்றி வருவதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு குற்றம் சாட்டினார்.
டில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்தெரிவித்ததாவது: பட்ஜெட் என்பது நாட்டுமக்களை பற்றியும், அவர்களது எதிர் காலத்தை பற்றியுமானது. பட்ஜெட் தாக்கல்செய்வதை எதிர்கட்சிகள் எதிர்ப்பது ஏன்? பட்ஜெட் வேண்டாம் என்றால் வளர்ச்சியோ, முன்னேற்றமோ வேண்டாம் என்பதேபொருள். இதைத்தான் அவர்கள் விரும்புகிறீர்களா?
மத்தியில் ஆளும், பா.ஜ., அரசுக்கு மக்கள் ஆதரவு பெருகிவருவதால், எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. முதலில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை எதிர்த்த அவர்கள், தற்போது, பட்ஜெட்கூட்டத்தை தள்ளி வைக்க கோருகின்றனர். தோல்விபயத்தில், எதிர்க்கட்சி தலைவர்கள் பிதற்றி வருகின்றனர். மக்கள் விரோதப் போக்கை அவர்கள் கடைபிடித்தால், இறுதியில் அது அவர்களை நோக்கியேதிரும்பும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.