ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைக்கு தடை

மத்தியபட்ஜெட்டில் ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்ததடை ஏப்ரல் முதல் அமலுக்குவருகிறது.

கறுப்புப் பணத்தை மீட்க உச்சநீதிமன்றம் நியமித்த முன்னாள் நீதிபதி ஷா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு மத்தியஅரசிடம் பல்வேறு பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. இதில் பெருந் தொகை பணப் பரிவர்த்தனைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. இதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய பட்ஜெட்டை தாக்கல்செய்த நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியபோது, சிறப்பு புலனாய்வுக் குழுவின் பரிந்துரைப்படி ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது. இந்த தடை ஏப்ரல் முதல் அமலுக்குவரும் என்று தெரிவித்தார்.

சிறப்பு புலனாய்வுக்குழு தலைவர் நீதிபதி ஷா கூறியதாவது: மத்திய அரசின் அறிவிப்பு நல்லமுடிவு. பல்வேறு நாடுகளில் பெருந் தொகையிலான பணப் பரிவர்த்தனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைபின்பற்றி இந்தியாவிலும் தடைவிதிக்க பரிந்துரைத்தோம். அதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இதேபோல தனி நபர் ரூ.15 லட்சத்துக்குமேல் ரொக்க பணம் வைத்திருக்கக் கூடாது என்றும் பரிந்துரை செய்திருந்தோம். அந்த பரிந்துரை ஏற்கப்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...