பா.ஜ.க-வில் நான் இணைந்தது வாழ்வில் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்

ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜ.க வெற்றிபெற்றால், இந்த தொகுதியை மத்திய அரசு தத்தெடுத்துக் கொள்ளும் என்றும், தொகுதியின் வளர்ச்சிக்காக நான்பாடுபடுவேன் என்றும் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் கூறினார்.

சென்னை கொருக்குப்பேட்டையில், செய்தியாளர்களிடம் பேசிய கங்கை அமரன், "கலையையும், பண்பாட்டையும், கலா சாரத்தையும் பாதுகாக்கக் கூடிய பா.ஜ.க-வில் நான் இணைந்தது வாழ்வில் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தியாவில் மேலிருந்து கீழ்வரைக்கும் படர்ந்து வந்துகொண்டிருக்கும் பா.ஜ.க என்ற சக்தி, தமிழ்நாட்டில் வர இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் என்னை வேட்பாளராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி.

மோடிஜி-யின் கொள்கை, திட்டங்கள்தான் என்னை ஈர்த்தது. என்னை வேட்பாளராக அறிவித்த நாள் முதல், பலர் என்னை தொலை பேசியில் அழைத்து, வாழ்த்து தெரிவித்துவருவது சந்தோஷமாக இருக்கிறது. வெற்றி வேட்பாளரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். கங்கை அமரன் முகத்துக்காக வேட்பாளர் அறிவிக்கவில்லை. என்னுடைய பிரச்னை சாதாரணம். மக்களைப்பற்றியே சிந்திக்கக்கூடிய பா.ஜ.க-வில் என்னை முன்னிலைப் படுத்தியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்களுக்கு வேலைவாங்கித் தரக்கூடிய, இளைஞர்களை ஈர்க்கக்கூடிய, தமிழகத்தில் ஏற்படக்கூடிய ஒருஎழுச்சியின் ஆரம்பமாக இந்தத் தேர்தல் இருக்கும்.

இந்தத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் என்று கங்கை அமரன் கூறினார்.(அப்போது குறுக்கிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், வெற்றி பெறும் என்று கூறினார்) தொடர்ந்து பேசிய கங்கைஅமரன், பா.ஜ.க வெற்றிபெறும்,வெற்றிபெறும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "இந்தத் தொகுதியை மத்திய அரசு தத்தெடுத்துக் கொள்ளும். நான் இந்தத் தொகுதியின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன். இந்தக்கட்சிக்காக எனது வாழ்க்கையைக் கொடுப்பேன். மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கக் கூடிய செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பலத்தை இறைவனும், மோடிஜியும், அமித்ஷாவும், பொன்னார் ஆகியோர் கொடுக்கவேண்டும். அவர்களின் வழிநடத்துதல்படி எனது பணிதொடரும். இந்தத் தாெகுதியில் மக்களுக்கு எது செய்துதரப்பட வில்லையோ… அதை எனது முதல்முயற்சியாகச் செய்து தரப்படும். இந்தத்தொகுதியில், தண்ணீர் பிரச்னை தொடங்கி எல்லா பிரச்னைகளும் இருக்கின்றன. இந்தத்தொகுதியை பா.ஜ.க கைப்பற்றும் என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...