2016-ம் ஆண்டில் நக்சல்கள் அதிகஅளவில் கொலை செய்யப்பட்டனர் என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆறுஆண்டுகளில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவர்கள் அதிகம் கொல்லப்பட்டது கடந்த ஆண்டில் தான். முந்தைய வருடத்தோடு ஒப்பிடும்போது 2016ல் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் எண்ணிக்கை 150 சதவீதம் அதிகம் என மத்திய உள்துறை இணை யமைச்சர் ஹன்ஸ் ராஜ் மக்களவையில் தெரிவித்தார்.
2015-ம் ஆண்டில் 89 நக்சலைட்டுகள் கொல்லப் பட்டனர். ஆனால், 2016-ம் ஆண்டில் 222 பேர் கொல்லப் பட்டுள்ளனர். இது 150 சதவீதம் அதிகம் என அவர் கூறினார்.
இடதுசாரி தீவிர வாதம் பரவியுள்ள 9 மாநிலங்களில் 44 மாவட்டங்களில் 5,411.81 கிமீ. அளவிற்கு சாலைகள் போடவும், 126 பாலங்கள்கட்டவும், வடிகால் கட்டுமானங் களுக்காகவும் அரசு ரூ 11,724.53 கோடி செலவுசெய்ய திட்டமிட்டுள்ளது என்றும் ஹன்ஸ் ராஜ் தெரிவித்தார்.
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.