ஆர்கே.நகர் இடைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவே முடங்கிப்போகும்

ஆர்கே.நகர் இடைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவே முடங்கிப்போகும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான பாஜக தேர்தல் அலுவலகம் தண்டையார் பேட்டையில் நேற்று திறக்கப்பட்டது. பாஜக தேசியசெயலாளர் எச்.ராஜா, ஆர்கே.நகர் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக வெற்றிபெற்று தமிழக அரசியல் வரலாற்றில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தும். எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இரட்டைஇலை சின்னத்தை பாதுகாக்கத் தகுதியுடையவர்கள் தற்போது அதிமுகவில் இல்லை. இதனால் சின்னம் முடக்கப்பட்டது சரியானமுடிவு. தேர்தலுக்கு பின் அதிமுக முடங்கிப் போகும் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

சின்னம் முடக்கப்பட்டதன் பின்னணியில் பாஜக இருப்பதாகக் கூறுபவர்கள் அடிப்படைஅரசியல் தெரியாதவர்கள். இரட்டைஇலை சின்னம் தோற்றுப் போகக் கூடாது என்பதற்காகத்தான் இயற்கையே இந்தச் சின்னத்தை முடக்கியுள்ளது.

ஆர்கே.நகர் இடைத் தேர்தலில் தமிழக பாஜகவினர் மட்டுமே பிரச்சாரம் செய்வோம். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல்பிரச்சாரத்தில் ஈடுபடுவார். சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சிறையில் உள்ளார். 2ஜி வழக்கில் திமுகவினர் மீது நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஊழலுக்கு எதிராக வாக்களிக்கவேண்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். தேசியகட்சி தமிழகத்தில் காலூன்றும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...