தஞ்சாவூரில் நேற்று மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபட்யாசோ நாயக் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு, ஜூன் 21ம் தேதி, உலகம் முழுவதும் யோகாநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால், உலகளவில், 12 நாடுகளில் உள்ள பல்கலைகளில் ஆயுர் வேதம், யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகியவை தொடர்பான ஆய்வு இருக்கை உருவாக்கப் பட்டுள்ளன.
ஆயுஷ் இயக்கத்தின்கீழ் சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவங்களுக்கு டாக்டர்களை தனியாக நியமிக்க வேண்டும் என்று மாநில அரசுகளிடம் வலியுறுத்தி உள்ளோம்.
இதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் தேசியளவில் ஆரம்பசுகாதார நிலையங்களில், 4,000க்கும் அதிகமான சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி டாக்டர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசு ஊதியம் வழங்கி வருகிறது.இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட சித்தா மருத்துவமனை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக, 10.50 ரூபாய் கோடி நிதி வழங்கப் படவுள்ளது. இந்த மருத்துவமனைகளை மாநில அரசுகள் நடத்தும். இத்திட்டத்தில் கடந்த ஆண்டும், நிகழாண்டும், 100க்கும் அதிகமான மருத்துவ மனைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.