ஆரம்பசுகாதார நிலையங்களில், 4,000க்கும் அதிகமான சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி டாக்டர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்

தஞ்சாவூரில் நேற்று மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபட்யாசோ நாயக் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு, ஜூன் 21ம் தேதி, உலகம் முழுவதும் யோகாநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால், உலகளவில், 12 நாடுகளில் உள்ள பல்கலைகளில் ஆயுர் வேதம், யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகியவை தொடர்பான ஆய்வு இருக்கை உருவாக்கப் பட்டுள்ளன.


ஆயுஷ் இயக்கத்தின்கீழ் சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவங்களுக்கு டாக்டர்களை தனியாக நியமிக்க வேண்டும் என்று மாநில அரசுகளிடம் வலியுறுத்தி உள்ளோம்.


இதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் தேசியளவில் ஆரம்பசுகாதார நிலையங்களில், 4,000க்கும் அதிகமான சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி டாக்டர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசு ஊதியம் வழங்கி வருகிறது.இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட சித்தா மருத்துவமனை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக, 10.50 ரூபாய் கோடி நிதி வழங்கப் படவுள்ளது. இந்த மருத்துவமனைகளை மாநில அரசுகள் நடத்தும். இத்திட்டத்தில் கடந்த ஆண்டும், நிகழாண்டும், 100க்கும் அதிகமான மருத்துவ மனைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...