கிழக்கு கடற்கரைச் சாலை ,ரூ.10 ஆயிரம்கோடி தர முன் வந்தும் தமிழக அரசு கண்டுகொள்ள வில்லை

கிழக்கு கடற்கரைசாலை அமைக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதிதர மத்திய அரசு முன்வந்தும், அதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

பாஜகவில் புதிதாக தொண்டர்கள் இணையும்விழா நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில், அகில பாரத பொதுச்செயலாளரும் பாஜக தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ், மாநிலதலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழகத்தில் பாஜ ஆட்சி அமையும்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தநேரத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து தொண்டர்கள் பாஜகவில் சேருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிமுகவுக்கு என்ன ஆனது என்று மக்களுக்கு மட்டுமல்ல, தொண்டர் களுக்கும் தெரியவில்லை. பிரதமர் மோடி குஜராத்தில் 3லட்சம் தடுப்பணைகள் கட்டியுள்ளார். ஆனால், தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலன்கட்டிய கல்லணை மட்டுமே உள்ளது. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சிசெய்த திமுக, அதிமுக ஒரு அணையைகூட கட்டவில்லை.

தமிழக வளர்ச்சிக்கு எந்த ஒருதிட்டத்தைக் கொண்டுவந்தாலும் அதை வேண்டாம் என்று சொல்வதற்காக மதிமுக, நாம் தமிழர் கட்சி போன்றவை உள்ளன. தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்களில் இதுவரை எந்த ஒரு தொழிற்சாலையோ, வளர்ச்சித்திட்டங்களோ செயல்படுத்தப் படவில்லை.

கிழக்கு கடற்கரைச் சாலை அமைக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதிதர மத்திய அரசு முன் வந்தும், அதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...