மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை :

அரசின் வரி விதிப்புகள் பற்றி திரைப் படங்களில் தவறான கருத்துகளைப் பரப்ப க்கூடாது’ என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரித் துள்ளார் தீபாவளி அன்று வெளியான ’மெர்சல்’ திரைப் படத்தில், ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டினார். '' ‘மெர்சல்' படத்தில் இருந்து ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்கா விட்டால், வழக்குத் தொடரப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார். 

தமிழிசையைத் தொடர்ந்து, பொன்.ராதாகிருஷ்ணனும் 'மெர்சல்' படத்துக்கு எதிராக கருத்து தெரிவித் துள்ளார். நாகர் கோவிலில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்,  ’பிற நாட்டில் எப்படி வரி விதித்துள்ளார்கள் என்பது பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை. நம் நாட்டின் சூழல் வேறு. பிற நாட்டின் சூழல் வேறு. நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றால், நேரடியாக வரட்டும். அதை விட்டுவிட்டு, திரைப்படங்களில் தவறான அரசியல் கருத்துகளைப் பரப்பக்கூடாது.  

’சோ’-வும் அரசியல் தொடர்பான திரைப்படங்கள் எடுத்திருக்கிறார். அவை, ரசிக்கும்படி இருக்கும். அவர் விமர்சிக்கும் அரசியல் வாதிகளே அந்த விமர்சனங்களை ரசிப்பார்கள். அவரின் விமர் சனங்களில் நகைச்சுவை கலந்து ரசிக்கும்படி இருக்கும்.தவறான கண்ணோ ட்டத்தில் விமர்சிக்க க்கூடாது. வரி விதிப்புகள் பற்றி உண்மைக்கு மாறாக உள்ள வசனங்களைத் திரைப் படத்தில் இருந்து சம்பந்தப் பட்டவர்கள் நீக்க வேண்டும்’ என்று எச்சரித்துள்ளார்..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...