மன்மோகன் சிங் டெல்லி பன்னீர் செல்வம்!

2004 ம் ஆண்டு மன்மோகன் சிங் இந்திய பிரதமராக பதவி ஏற்ற போது புதிய நம்பிக்கை உண்டானது.காரணம் நரசிம்ம ராவ் ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக பெறுப்பேற்ற மன்மோகன் சிங் சிறப்பாக செயல்பட்டார். தாரளமய மற்றும் உலகமயக் கொள்கை அப்போது தான் இந்தியாவில் அறிமுகமானது! அதன் விளைவாக நாம் கண்ட பொருளாதார மாற்றங்கள் மகத்தானவை.

எல்லா கொள்கைகளையும் அரைகுறையாக அமலாக்குவது இந்திய அரசியலின் பலவீனம் அதனால் தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கையின் பின்விளைவாக பணக்காரர்களும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து என்றாலும் பொருளாதார வளர்ச்சி சிறப்பானது! இந்த மாற்றங்களுக்கு மன்மோகன்சிங் முக்கிய காரணம்!


அதனால் 2004 ல் மன்மோகன் சிங் பிரதமராக பதவி ஏற்ற போது புதிய நம்பிக்கை பிறந்தது.
ஆனால் அந்த நம்பிக்கை வேகமாக பொய்த்துப் போது! காரணம் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார் ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் சோனியா காந்தி தனி அமைச்சரவை இயக்கியது.அவரது அமைச்சரவை என் ஜீ ஓ காரர்களை கொண்டதாக இருந்தது.


மன்மோகன் சிங் எடுத்துக்க முயன்ற சீர்திருத்த நடவடிக்கைகளை தடுப்பதாவும் என் ஜீ ஓக்கள் நினைப்பதை திணிப்பதாகவும் சோனியா காந்தி தலைமையிலான குழு இருந்தது.
இந்த போக்கு 2004-2009 ஆட்சியிலேயே துவங்கி விட்டது.2G, நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட ஊழல்களும் அப்போதே அரங்கேறி விட்டன. ஜெயலலிதா முதலமைச்சராக தொடர முடியாமல் போகும் நேரங்களில் ஓ.பன்னீர் செல்வம் பதவியில் அமர்ந்தார்.இது இடைக்கால ஏற்பாடு.
முதலமைச்சராக பன்னீர் செல்வம் இருந்தாலும் ஜெயலலிதா தான் ஆட்சி நடத்தினார்.


இதைப் போல தான் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார்.ஆட்சியை சோனியா காந்தி நடத்தினார்.
ஒரே வித்தியாசம் மன்மோகன் சிங் இடைக்கால ஏற்பாடாக பதவி வகிக்க வில்லை அவ்வளவுதான்! இப்போது நினைத்துப் பார்த்தால் மன்மோகன் சிங்கை பன்னீர்செல்வத்துடன் ஒப்பிட்டு பேசி வந்தது தவறு என்று தோன்றுகிறது. ஆமாம் இந்த ஒப்பீட்டின் மூலம் பன்னீர் செல்வத்தை அவமதித்ததாக தோன்றுகிறது!

நன்றி வசந்தன் பெருமாள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...