ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டதும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
பா.ஜனதா சார்பில் கடந்ததேர்தலில் போட்டியிட்ட கங்கை அமரன் மீண்டும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் போட்டியிட வில்லை. அவருக்கு பதிலாக கரு.நாகராஜன் பா.ஜனதா வேட்பாளர் என்று அறிவிக்கப் பட்டது.
இந்த நிலையில் ஆர்.கே. நகரில் மீண்டும் போட்டியிடாதது ஏன்? என்பது குறித்து கங்கைஅமரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமீபத்தில் எனக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்றேன். இப்போது உடல் நிலை தேறிவருகிறது. உடல் நலகுறைவு காரணமாகவே இந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிட வில்லை.
பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார். அவர் துடிப்பானவர். ஆர்.கே.நகர் மக்கள் அவருக்கு வாக்களித்து பா.ஜனதாவை வெற்றிபெற செய்ய வேண்டும். பா.ஜனதா அங்கு வெற்றி பெற்றால் அது தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும். ஆர்.கே.நகர் தொகுதி மத்திய அரசு ஆதரவுடன் வளர்ச்சிபெறும்.
இவ்வாறு கங்கை அமரன் கூறினார்.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.