அபுதாபியில் இந்து கோவில்: பிரதமர் மோடி 10-ந்தேதி திறந்து வைக்கிறார்

அரபு நாடுகளில் பொதுவாக மாற்றுமத வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிப்பது இல்லை. ஆனாலும், துபாயில் ஏற்கனவே இந்துகோவில் ஒன்று கட்ட அனுமதிக்கப்பட்டு அந்தகோவில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது.

இப்போது ஐக்கிய அரபுநாடுகளில் ஒன்றான அபுதாபியிலும் இந்துகோவில் கட்ட அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அங்குள்ள அல்வத்பா என்ற இடத்தில் இந்து கோவில் கட்டிகொள்ள அபுதாபி அரசு 20 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தை வழங்கி உள்ளது.

பிரதமர் மோடி 2015-ம் ஆண்டு அபிதாபியில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது இதற்கான அனுமதியை ஐக்கிய அரபு அரசு வழங்கியது.

அந்த இடத்தில் தற்போது தனியார்கள் மூலம் நிதி திரட்டி கோவில் கட்டப் பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்.

துபாயில் வருகிற 11-ந்தேதி சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதற்காக 4 நாள் சுற்றுப்பயணமாக அவர் மேற்கு ஆசிய நாடுகளுக்கு பயணம்செய்கிறார்.

முதலில் 9-ந் தேதி ஜோர்டான் செல்லும் அவர் அங்கிருந்து பாலஸ்தீனம் செல்கிறார். 10-ந்தேதி அபுதாபி செல்கிறார்.

அப்போது அங்கு கட்டப்பட்டுள் இந்துகோவிலை திறந்து வைக்கிறார். 11-ந் தேதி துபாய் செல்லும் அவர் மாநாட்டில் கலந்துகொள்வதுடன் இந்திய மக்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கிறார்.

ஐக்கிய அரபு நாடுகளில் 26 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இது அந்த நாட்டின் மக்கள்தொகையில் 30 சதவீதம் ஆகும். இவர்களில் பெரும் பாலானோர் இந்துக்கள் அவர்கள் வழிபடும்வகையில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...