சிங்கத்தின் ஆட்சியில் நரிகள் ஊளையிடத்தான் செய்யும்

மூன்று ஆண்டுகளில் மோடி ஆட்சியில் என்ன நன்மை நடந்து விட்டது என்று இன்று இப்படி வாய் கூசாமல் வஞ்சகம் பேசும் நபர்கள் கொஞ்சம் உங்கள் வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் விலைவாசியை எவ்வளவு இறங்கி உள்ளது என்று பாருங்கள்

அன்று காங்கிரஸ் ஆட்சியில் ஒருகிலோ து.பருப்பு 180
இன்று மோடி ஆட்சியில் 80 ரூபாய் ..

அன்று காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ உ.பருப்பு 140ரூபாய்
இன்று மோடி ஆட்சியில் 78 ரூபாய்

அன்று காங்கிரஸ் ஆட்சியில் ஒருகிலோ பாசி பருப்பு 144 ரூபாய்
இன்று மோடி ஆட்சியில் 84.ரூபாய்கள் .

கட்டுமான பொருட்களை பாருங்கள்: விலைவாசி குறைந்து தான் உள்ளது உதாரணத்திற்கு அன்று.காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ இரும்பு 67 ரூபாய்கள்
இன்று மோடி ஆட்சியில் 43 ரூபாய்கள்

இது மாதிரி ஜவுளி விலைவாசியை பாருங்கள்: அன்று காங்கிரஸ் ஆட்சியில் ஒரு மீட்டர் ஜீன்ஸ் துணி விலை 600 ரூபாய் இன்று மோடி ஆட்சியில் ஒரு மீட்டர் ஜீன்ஸ் துணியின் விலை 400 ரூபாய் தான்

நமது செல்போன் விலை அன்று காங்கிரஸ் ஆட்சியில் 3G Samsung Cell 15 ஆயிரம் ரூபாய்க்கு க்குமேல் விற்றது

இன்று பாஜக மோடி அவர்களின் ஆட்சியில் 4G Samsung Cell 8 ஆயிரம் ரூபாய்க்கு விலை குறைந்துவிட்டது.

அன்று காங்கிரஸ் ஆட்சியில் ஒரு ஜிபி டேட்டா ஒரு மாதத்திற்கு 360

இன்று பாஜக மோடி ஆட்சியில் 30 ஜிபி டேட்டா ஒரு மாதத்திற்கு 175 ரூபாய்

மன் மோகன் ஆட்சியில் நூறு நாள் வேலை.. 100ரூபாய்கள் மட்டுமே சம்பளம்..தான் அன்று எவ்வளவு விலைவாசியை பாருங்கள் இன்று மோடி ஆட்சியில் நூற்றிஐம்பது நாள் வேலை.. 200ரூபாய்கள் சம்பளம்.

அன்று காங்கிரஸ் ஆட்சியில் சாதாரண கொத்தனார் சம்பளம் 350 ரூபாய்கள் தான் இன்று மோடி ஆட்சியில் 700 ரூபாய்கள்

அரசு ஊழியர்களுக்கு 50% முதல் 100% சம்பளம் பே கமிஷன் உயர்த்தி உள்ளது. பணம் வரவு அதிகம் சம்பளம் உயர்வு அதிகரித்து பொருட்கள் விலைவாசியும் குறைந்து இருக்கும் பாஜக மோடியின் ஆட்சி பொற்கால ஆட்சிதானே…

வீடு இல்லாத ஏழைகள் அனைவருக்கும் 1 கோடிவீடு, கழிப்பறை வசதி இல்லாத அனைவருக்கும் 12 ஆயிரம் ரூபாய்க்கு கழிப்பறை கட்டாயம் கட்டி தரப்படுகிறது முத்ரா கடன் திட்டத்தில் நியாயமான தொழில் கடன் கொடுக்கப்படுகிறது.

தினம் ஒரு ரூபாய் வீதம் வருடத்திற்கு வெறும் 360 ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது.

மாதம் ஒரு ரூபாய் வீதம் வருடத்திற்கு வெறும் 12 ரூபாய்க்கு விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு உண்மையில் பயிர் விளைவித்து பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு உரிய பயிர் இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது ( போலி விவசாயிகள் கடனுக்கு தள்ளுபடி இல்லை )

மத்தியரசு வேலைவாய்ப்பு உருவாக்க தொழில் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

வெளி நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு அந்த அந்த நாட்டிற்கு பிரதமர் மோடி நேரடியாக சென்று உரிய சம்பளம், உயிர் பாதுகாப்பு, ஆயுள் காப்பீடு இழப்பு தொகை, விபத்து காப்பீடு இழப்பு தொகை, சம்பந்தமாக ஒவ்வொரு நாட்டிலும் ஒப்பந்தம் போட்டு நமது இந்தியர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

வெளிநாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் பத்திரமாக மீட்க பிரதமர் மோடி இதுவரை முயற்சி செய்து பல நபர்கள் மீட்டுள்ளார்.

அன்று தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்து மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி தமிழர்கள் படுகொலை நடத்தினார்கள் இன்று பாஜக ஆட்சியில் அந்த பயங்கர மீனவர்கள் படுகொலைகளை பிரதமர் மோடியால் தான் தடுக்கப்பட்டது.

இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்க்கை முன்னேற்றம் மேம்படுத்தும் நடவடிக்கையை பிரதமர் இலங்கையில் நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உணவு மருத்துவ வசதி இதையெல்லாம் உடனடியாக செய்தார். தமிழர்களுக்கு ஒரு லட்சம் குடியிருப்பு வீடுகளையும் இலவசமாக கட்டி தந்துள்ளார். பள்ளிக்கூடங்கள் கட்டி தந்துள்ளார் மருத்துவமனைகள் கட்டி தந்துள்ளார். மேலும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு கடுமையாக கட்டுபாடு உருவாக்கி தமிழர்களின் உயிருக்கும் தமிழர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு
உரிய உத்தரவாதம் உருவாக்கியவர் நமது பிரதமர் மோடி அவர்கள் தான்.

 

எல்லாவற்றிக்கும் மேலாக நாம் பெருமை பட வேண்டிய விசயம் 70 ஆண்டு சுதந்திர இந்தியாவில் உலக வங்கியில் கடன் வாங்காத ஒரே பிரதமர் மோடி அவர்கள்தான்

உலக வல்லரசு தலைவர்கள் எல்லாம் மதிக்க கூடிய ஒரே பிரதமர் மோடி அவர்கள்தான். அதனால் இந்தியன் என்றால் தலைநிமிர்ந்து நடக்க வைத்த எங்கள் பிரதமர் மோடி அவர்களின் ஆட்சி பொற்கால ஆட்சி தான் என்று கர்வத்தோடு நெஞ்சம் நிமிர்த்தி என்னால் முடிந்த விளக்கம் தந்து உள்ளேன்.

கண்களை கட்டிக் கொண்டுள்ள பூனைகளுக்கு உலகம் இருட்டாகத்தானே தெரியும்…

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் என்கவுன்டர்களை கு ...

தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும் L. முருகன் கருத்து 'தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். துப்பாக்கியை வைத்து சட்டம் ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலை ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாதனை ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் கு ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் கூறுகிறது பிரதமர் மோடி பேச்சு '' ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம் குறித்து ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...