வாஜ்பாய் இருந்திருந்தால் நதிகள் பிரச்சனை தீர்வை எட்டியிருக்கும்

தமிழக பாஜக. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் திருச்சியில்  நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகாவில் ஒருவாரம் முகாமிட்டு பிரசாரம்செய்தேன். அங்கு சிறப்பான சூழ்நிலை நிலவுகிறது. மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். கர்நாடகாவில் பாஜக. வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பார்கள். அதுபோல் எடியூரப்பா ஆட்சியின் அருமையை சித்தராமையா ஆட்சியின் மூலம் மக்கள் தெரிந்துள்ளனர்.

காவிரி விவகாரத்தை மத்தியஅரசு தெளிவாக அணுகியிருக்கிறது. ஆள சிந்தித்து கால அவகாசம் எடுத்துக் கொண்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் தமிழகத்திற்கு நல்ல தீர்வுகிடைக்கும். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டுதான் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை 14-ந்தேதி சந்திக்கிறது. கர்நாடக தேர்தலில் அரசியல் இருப்பது உண்மைதான். 4 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டும், சித்தராமையா தண்ணீர் இல்லை என்று கூறிவிட்டார். இதற்கு தமிழகத்தில் எந்தவித எதிர்ப்பும் கிளம்ப வில்லை. பா.ஜ.க.வை மையமாக வைத்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எந்த எதிர்ப்புகள்வந்தாலும் அதனை சந்திப்போம்.
 

காவிரி பிரச்சனைக்காக நடை பயணம் மேற்கொள்பவர்கள் பெங்களூரில் நடைபயணம் செல்ல வேண்டியது தானே. மு.க.ஸ்டாலின் இங்கு அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டுகிறார். அவர்கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் ராகுல் காந்தியை அழைத்து சென்று சித்தராமையாவிடம் பேச வேண்டியதுதானே. இதன்மூலம் இந்த விவகாரத்தில் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்கள்.

பா.ஜ.க. 22 மாநிலங்களில் ஆட்சிசெய்கிறது. அதுபோல் 23-வது மாநிலமாக கர்நாடகாவிலும் ஆட்சி அமைக்கும். அங்கு ஆட்சிஅமைந்ததும் தமிழகத்தில் காவிரிதண்ணீர் திறந்துவிடப்படும்.

காவிரி மட்டுமல்லாமல் முல்லைபெரியாறு, பாலாறு பிரச்சனையும் உள்ளது. அதற்கெல்லாம் யார்காரணம் என்று முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நதிகள் பிரச்சனை அனைத்திற்கும் பாஜக. நிரந்தர தீர்வுகாணும். கோதாவரி நீரும்கூட பெற்றுதரப்படும். குட்கா விவகாரத்தில் தி.மு.க.வை சேர்ந்த ஒருவரது பெயரும் அடிபடுகிறது. இதற்கு மு.க.ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை. நதிகள் இணைப்புக்கு முதலில் குரல்கொடுத்தவர் வாஜ்பாய்தான். அதன்பிறகு ரஜினிகாந்த் குரல்கொடுத்தார். வாஜ்பாய் இருந்திருந்தால் நதிகள் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருப்பார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...