ஜி.எஸ்.டி.யால் ஏழை, நடுத்தரமக்களுக்கு மிகவும் தேவையான அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்து ள்ளதாக பாஜக. தேசியசெயலாளா் ஹெச்.ராஜா தொிவித்துள்ளாா்.
பாஜக. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா நேற்று காரைக்குடியில் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா்கூறுகையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக. அரசு தனது 4 ஆண்டுகால ஆட்சியை நிறைவுசெய்துள்ளது. முந்தைய காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியில் அரசு மீது தினம் ஒருஊழல் புகாா் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது எதிா்க் கட்சிகள் கூட குற்றம் சாட்ட முடியாத வகையில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுவருகிறது. ஏழை, நடுத்தர குடும்பங்களை சோ்ந்த மக்களுக்கு மிகவும் அவசியமான அத்தியாவசிய பொருள்களின் விலை ஜிஎஸ்டி.யால் குறைந்துள்ளது. மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்றோரின் நிா்வாகத்தில் பருப்புவகைகள் ரூ.200 என்ற விகிதத்தில் இருந்தது.
ஆனால் தற்போது ஜி.எஸ்.டி.யால் பருப்புவகைகளின் விலை ரூ.60 முதல் 80 வரை விலை குறைந்துள்ளது. ஏழை, எளியமக்களுக்கு பா.ஜ.க. அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. காவிாியில் கடந்த 50 ஆண்டுகளாக திமுக., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் துரோகம் இழைத்துவந்தன. தற்போது காவிாி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட போதிலும் கா்நாடகா அரசு சாா்பில் பிரதிநிதிகளை நியமிக்காத குமாரசாமிக்கு ஸ்டாலின் ஆதரவுதொிவிப்பது தமிழா்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என குற்றம் சாட்டியுள்ளாா்.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.