ஹர்திக்படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடத்தத் தயார்

குஜராத்தில், 'இட  ஒதுக்கீடு கேட்டு போராடிவரும் ஹர்திக்படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடத்தத் தயார்' என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

மத்திய சமூக நீதித் துறை அமைச்சராக இருப்பவர், ராம்தாஸ் அத்வாலே. குஜராத்மாநிலம் அகமதாபாத்துக்குச் சென்ற இவர், நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ` குஜராத்தில் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடி வரும் பதிதார் இனத்தைச் சேர்ந்த ஹர்திக் படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் தூதுவராக இருந்து பேச்சு வார்த்தை நடத்தத் தயாராக உள்ளேன். காங்கிரஸுடன் இருப்பதால், பதிதார் இனமக்கள்  இட ஒதுக்கீடு பெற மாட்டார்கள் என்று ஹர்திக்குக்கு நான் சொன்னேன்.

ஹர்திக்,  பி.ஜே.பி-யுடன்  சேரவேண்டும். அரசாங்கத்துடன் ஒரு பிரச்னையைப் பற்றி விவாதிக்க நான் அவரை கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பிரச்னைக்கு பேச்சு வார்த்தைமூலம் தீர்வுகாண முடியும் என எனக்கு நம்பிக்கையுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். ஆனால், கடந்த முறை பெற்ற இடங்களைவிட 30 முதல் 40 இடங்கள் குறைவாகக் கிடைக்கும்' என்றார் அத்வாலே.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...