அமித்ஷாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு?

மக்களவை தேர்தல் அடுத்தஆண்டு நடைபெறவுள்ளதால் பாஜக நிர்வாகிகள் தேர்தல் ஒத்தி வைக்கபடுகிறது. இதனால் பாஜக தலைவர் அமித்ஷாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட உள்ளது.

பாஜகவின் இரண்டு நாள் தேசியசெயற்குழுக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெறுகிறது. கட்சியின் தலைவர் அமித்ஷா கூட்டத்தை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி, மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா பேசியதாவது:

‘‘பாஜக மேக்கிங் இந்தியாவை உருவாக்குகிறது. ஆனால் காங்கிரஸ் இந்தியாவை பிரேக்கிங் செய்கிறது. 2014-ம் ஆண்டு மக்களவைதேர்தலை விடவும் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில், கூடுதலான தொகுதியில் பாஜக வெற்றிபெறும்.

நாட்டில் மிகப்பெரிய அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை பாஜக ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மக்களிடம் ஆதரவு உள்ளது.

பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மெகாகூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. எதிர் கட்சிகளை மக்கள் முற்றிலமாக நிராகரிப்பார்கள்’’ எனக் கூறினார்.

இந்த கூட்டத்தில் நாளை முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. பாஜக நிர்வாகிகளின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது. கட்சித் தலைவர் அமித்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

ஆனால் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் புதியநிர்வாகிகள் தேர்தலை ஓராண்டுக்கு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அமித் ஷா உள்ளிட்டோரின் பதவிக் காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படும் என தெரிகிறது. இதற்கான தீர்மானம் நாளை நிறைவேற்றப்பட உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...