ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல மேஜிக்வித்தகரின் 20 மாணவர்களை, மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்துக்கு பாஜக பயன்படுத்த உள்ளது.
ம.பிரதேசத்தில் கடந்த 3 தேர்தல்களில் பாஜக வென்று ஆட்சி அமைத்துள்ளது. தொடர்ந்து 4வது முறையாக ஆட்சி அரியணையில் நீடிக்கவேண்டும் என்ற நோக்கில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறது .
இதன் ஒரு பகுதியாக மேஜிக் வித்தை மூலம் ஆட்சியின்போது செய்த திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்து சொல்ல முனைந்துள்ளது பாஜக. இதுகுறித்து பாஜக-வின் செய்தி தொடர்பாளர் ராஜ்னீஷ் அகர்வால், '15 ஆண்டுகளாக எங்கள் அரசு செய்த சாதனைகளை மேஜிக்வித்தை மூலம் எடுத்துச்சொல்ல இருக்கிறோம்.
மேலும் மேஜிக் ஷோ மூலம், 1993 முதல் 2003 வரை திக்விஜய் சிங்கிற்கு கீழ் அமைந்த காங்கிரஸ் ஆட்சியின் குறைபாடுகளும் சுட்டிக் காட்டப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த சமலாவேணு மேஜிக் குழுவுடன் இணைந்துதான் இந்தத் திட்டத்தை பாஜக செயல்படுத்த உள்ளது. இதுகுறித்து வேணு என்.டி.டி.வி-யிடம் கூறுகையில், ‘பாஜக தரப்பு, எதிர்கட்சி குறித்து என்னசொல்ல வேண்டும் என்பது குறித்தும், தங்களைக் குறித்து என்ன தெரிவிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் எங்களுக்கு தெரியபடுத்தியுள்ளது. அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு, அதை மக்களுக்கு பிடித்த வகையில் வெளிப்படுத்துவோம்' என்று கூறியுள்ளார்.
பாஜக, இதற்கு முன்னர் உத்தர பிரதேச தேர்தலின் போது, மேஜிக்ஷோக்களை நடத்தின. அப்போது, அது பலநேர்மறை விஷயங்களை கொடுத்ததால், மீண்டும் அந்த யுக்தியை பின்பற்ற உள்ளது பாஜக.
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.