திரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வுக்கு வெற்றிகிடைக்க வேண்டும்

திரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வுக்கு வெற்றிகிடைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பாரதிய ஜனதா, நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

காங்கிரசின் ஜனநாயக விரோத முறைக்கு சரியானபதில், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே. ஜனநாயகத்திற்கு தகவல் மற்றும் விழிப்புணர்வு ஆகியவை முக்கியம். காங்கிரஸ் மற்றும் அதன் அபாயகரமான விளை யாட்டு குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.தேர்தலுக்கு முன்னர் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம்குறித்து கேள்வி எழுப்பி, அதன்மீது சந்தேக பார்வையை எழுப்ப முயற்சிப்பார்கள். ஆனால், தேர்தலுக்கு பின்னர், காங்கிரஸ் வெற்றிபெற்றால், எந்திரங்களை ஏற்றுக் கொள்வார்கள்.

ராணுவம், சிஏஜி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் காங்கிரஸ் அவமான படுத்தியுள்ளது. சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் வழங்கியதீர்ப்பை அக்கட்சி விரும்பாத காரணத்தினால், அதுகுறித்து கேள்வி எழுப்பியது. முன்னர், கோர்ட்டை மிரட்டியதுடன் மட்டுமல்லாமல், பதவிநீக்கம் செய்யப்போவதாக கூறி அச்சுறுத்தியது.அவசரகால நிலையை பிரகடனப்படுத்திய காங்கிரஸ் கட்சி இப்போது பாரதிய ஜனதா,வை குறை கூடுகிறது.

திரிபுரா மாநிலத்தை போன்று தமிழகத்திலும் பாரதிய ஜனதா., வெற்றி பெற வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தை கட்டிகாப்பவர்கள் மக்களதான். இதனால், காங்கிரஸ்., தந்திரத்தால் அதை அழிக்கபார்க்கிறது.

ஜனநாயக்தை உதாசீனப்படுத்திவந்த காங்கிரஸ் கட்சி., தற்போது மத்திய அரசு மீது குறைசொல்கிறது. பாஜவை வலுப்படுத்த சம்பந்தப்பட நிர்வாகிகள் தங்களின் பூத் பகுதிக்கு சென்று தேர்தல் பணியாற்ற வேண்டும்.

இளைஞர்கள், முதியோர், பெண்கள் போன்ற அனைத்து தரப்பு மக்களிடமும் நமது அரசின் சாதனைகளை கொண்டு செல்ல, நமது பாரதிய ஜனதா காரிய கர்த்தாக்கள் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களுடனான தொடர்புகளை அதிகரிக்க வேண்டும்.பிரதம மந்திரியின் வீடு திட்டங்கள், மருத்துவ காப்பீட்டு திட்டங்கள், காதல் சுகாதாரத் திட்டங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை நமது பூத்தில் உள்ள மக்கள் ஒவ்வொருவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும். மத்திய அரசு சாமானியனின் நன்மைக்காகவே கடுமையாக உழைக்கிறது என்பதை எடுத்து சொல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...