இனி காஷ்மீர் முன்னேறும்!

370 தாவது சட்டப் பிரிவு வாயிலாக காஷ்மீருக்கு 1954 ல் தற்காலிகமாக வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மற்றும் சலுகைகள் காரணமாக, காஷ்மீரில் ஒரு கல்வி நிறுவனமோ, மருத்துவமனையோ, தொழிற்சாலையோ நிறுவ முடியவில்லை!

காரணம் எந்த நிறுவனத்திற்கும் அங்கு நிலம் வாங்க முடியாது!, நிலம் வாங்க முடியாதென்றால், எப்படி முதலீடு செய்வார்கள்? அன்னிய முதலீட்டை ஈர்க்க முடியவில்லை! உள்ளூர் மக்கள் மட்டுமே முத்லீடு செய்துக்கொள்ளலாம் என்றால், எந்த அளவுக்கு முதலீடு செய்திடமுடியும்?

எனவே எத்தகைய பெரிய நிறுவனமும் அங்கு துவங்கிடமுடியவில்லை! எனவே யாருக்கும் வேலை இல்லை! யாருக்கும் வேலை இல்லை என்றால் போராட்டக்காரர்களுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் கொண்டாட்டம்தான்!

(தமிழகத்திலும் இத்தகைய ஒரு சூழ்நிலையை உருவாக்கத்தான் திமுக தலைமையில் இப்போது போராட்டக் காரர்கள் முயலுகிறார்கள்!)

காரணம் வேலை இல்லை என்றால்தான், கல்லடிக்கவும், கத்தி எடுக்கவும், துப்பாக்கி தூக்கவும், தலையை எடுக்கவும், கைகால் எடுக்கவும், குண்டு வைக்கவும் ஆட்கள் கிடைப்பார்கள்! இது பாகிஸ்தான் பயங்கர வாதிகளுக்கு கொண்டாட்டம்!

நாட்டை முன்னேற்ற நாடாளுமன்றம் எந்த சட்டத்தை கொண்டுவந்தாலும் அது காஷ்மீர் சிறப்பு சட்டத்தின்படி காஷ்மீரில் மட்டும் செல்லுபடி ஆகாது! எனவே மத்திய அரசு நினைத்தாலும் 370 தாவது சட்டதிருத்தம் இருக்கும் வரை, காஷ்மீர் மாநில மக்களை முன்னேற்ற முடியாது!

காஷ்மீர் ஒரு சுடுக்காடாக, பொட்டைக்காடாக, படிப்பறிவு இல்லாத, பழமைவாதம் நிறைந்த இளைஞர்கள் நிறைந்த பயங்கரவாத பூமியாக இருந்தது!

இப்படி இருப்பதுதான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும், இவர்கள் இருவர்களிடமும் லஞ்சம் வாங்கும் காங்கிரஸ் காரர்களுக்கும் நாட்டில் உள்ள இதர பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் சொர்க்க பூமியாக இருந்தது!

மொத்தத்தில் 1954 ல் தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட 370 தாவது சட்டப் பிரிவு ஜம்மு காஷ்மீரின் முட்டுக்கட்டையாக விழங்கியது! ஜம்மு காஷ்மீர் மக்களின் நலன் கருதி அந்த முட்டுக்கட்டை 2019 ஆகஸ்ட் 5 ம் தேதி நீக்கப்பட்டுள்ளது!

இந்த ஆகஸ்ட் 5 தான் இந்தியாவின் உண்மையான சுதந்திரமாகும்!

இனி காஷ்மீர் முன்னேற்றப்பாதையில் அடி எடுத்துவைக்கும்!

– குமரிகிருஷ்ணன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...