பிரான்ஸ் நாட்டில்இருந்து வாங்கப்படும் ரபேல் விமானங்கள் இந்திய விமானப் படையில் விரைவில் இணைக்கப்பட உள்ளன.
இதற்காக ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள 17 ஸ்குவாட்ரம் விமானப்படைத்தளம் ரபேல் விமானங்களை இயக்குவதற்கு ஏற்றவகையில் புத்துயிர்ப்பு செய்யப்படுகிறது.
இன்று புத்துயிர்ப்பு பணிகளை தொடங்கிவைக்க உள்ள விமானப்படைத் தலைவர் பிஎஸ்.தனோவா ரபேல் விமானங்களுக்கான முன்னேற்பாடுகளை பார்வை யிடுவார்.
முன்பு இங்குதான் மிக் 21 விமானங்கள் இயக்கப்பட்டன. அங்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கைக் கேற்ப எண்ணுடன் கூடிய பெயர் வழங்கப் பட்டு வந்தது.
விரைவில் இந்த விமானப் படைத்தளத்தில் தான் இந்தியாவின் முதல் ரபேல்விமானம் தரையிறங்க உள்ளது. முன்பு பஞ்சாப் மாநிலம் பட்டின்டாவில் ரபேல்விமானத்தை பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் பின்னர் அது ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று சீனாவுக்கு எதிரான தற்காப்புக்காக மேற்கு வங்கத்தில் உள்ள ஹாஷிமாரா விமானப்படைத் தளமும் அடுத்த ரபேல் விமானத்திற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இதற்க்கிடையே: பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர்விமானங்களை, அக்., 8 அன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பெற்றுக் கொள்கிறார். இதற்காக அவர் பிரான்ஸ் செல்ல உள்ளார்.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், அக்.,8 முக்கியமான நாள். அன்று தசராபண்டிகையும், விமானப்படை நாளும் வருகிறது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்துடன், பாதுகாப்புத் துறை செயலர் அஜய் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் சென்று, ரபேல் விமானங்களை பெற்று கொள்கின்றனர். டசால்ட் நிறுவனத்தின் உயர்அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர் இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |