கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மோடி முதல் இடம்

உலகம் முழுவதும் சுமார் 210 க்கும் அதிகமான நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மெல்லமெல்ல அதிகரித்து வருகிறது. அதில் குறிப்பாக அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் அதனுடைய கோரத்தாண்டவம் பார்க்கமுடிகிறது.

தொடர்ந்து மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக இருக்கக் கூடிய வைரசால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற ஒருதருணத்தில் இந்தியாவிலும் தாக்கம் மெல்லமெல்ல அதிகரித்து வருகிறது. இருந்தபோதிலும் ஆரம்ப காலகட்டத்திலேயே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்பிறகு ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த ஒரு     நிலையில் முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்படாததால் இரண்டாவது முறையாக 19 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மொத்தம் 40 நாட்கள் என வரும் மே 3ம் தேதிவரை ஊரடங்கு தொடரும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் கொரோனா பரவுதலை தடுக்க சிறப்பாக கையாளும் உலக தலைவர்கள் யார் யார் என்பது குறித்து மார்னிங் கன்சல்ட் என்ற சர்வதேச நிறுவனம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் படி தரவரிசைப் பட்டியலை தயார் செய்தது. அதில் 68 புள்ளிகளை பெற்று பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்திலும் அவருக்கு அடுத்தபடியாக மெக்சிகோ அதிபர் லோபஸ் ஓபரேட்டர் இரண்டாவது இடத்தையும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் 35 புள்ளிகள் பெற்று 3வது இடத்தையும் பிடித்தனர்.

இதில் உற்றுநோக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உலகையே ஆட்டிப் படைக்கும் வல்லரசான அமெரிக்க அதிபரும், பிரதமர் மோடியின் நண்பருமான டிரம்ப் மைனஸ் 3 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்தார். பிரான்ஸ் அதிபர் மெக்ரானுக்கு மைனஸ் 21 புள்ளிகள் பெற்று 9 ஆவது இடத்திலும், ஜப்பான் பிரதமர் ஷிங்கே அபேவுக்கு மைனஸ் 33 புள்ளிகளுடன் 10 ஆவது இடமும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் மேலும் அதிகரித்து, உலக அளவில் பெரும் தலைவராக உருவெடுத்து உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...