ஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்றிலும் மாறுபட்டு இருக்கும்

ஊரடங்கு மீ்ண்டும்தொடரும்; ஆனால் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

கரோனா பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்த பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றினார்.

அவர் பேசியது ஒரு வைரஸ் உலத்தில் பெரும் நாசம் ஏற்படுத்தியுள்ளது. நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள தொடர்ந்துபோராட வேண்டியுள்ளது. பொருளாதார முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதுபோன்ற ஒரு நெருக்கடியை நாம் இதற்குமுன்பு பார்த்ததில்லை, கேள்விப்பட்டதில்லை. இதுநிச்சயமாக மனிதகுலத்திற்கு கற்பனைசெய்ய முடியாதது. இது முன்னர் நடந்திராதது. ஆனால் இந்தவைரஸிடம் மனிதகுலம் தோற்காது. நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது மட்டுமல்லாமல் முன்னேற வேண்டும்.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் இப்போது முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது.

உலகம் முழுவதையும் ஒரேகுடும்பமாக நினைப்பது இந்தியாவின் குணம். உலகில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்தியா சுயசார்பு அடைவது உலகத்திற்கே நல்லசெய்தி. உலகத்திற்கே, இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது. 21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றப்பட வேண்டும் என்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இந்தியா இந்த இக்கட்டான நிலையை, வாய்ப்புகளை உருவாக்குவ தற்கான இடமாக மாற்றிக் கொண்டு உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் உலகம் முழுக்க அனுப்பப்பட்டு மக்களுக்கு உதவிவருகிறது

இந்தியாவின் 5 தூண்கள் இவைதான்: பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பத்தால் இயக்கம், துடிப்புள்ள மக்கள்தொகை தேவை. நான் இன்று ஒருசிறப்பு பொருளாதார தொகுப்பை அறிவிக்கிறேன். நாட்டுக்கான இந்த சிறப்பு பொருளாதார நிவாரணதொகுப்பு 20 லட்சம்கோடி மதிப்புள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 10% ஆகும் என்றார்.

அவர் உரையில் முக்கிய அம்சங்கள்:

* கடந்த 4 மாதங்களாக உலகம் முழுவதுமே கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்திவருகின்றன. நமக்கு இது ஒருபுதிய அனுபவம், எதிர்பாராத பாதிப்பு.

* உலகம் முழுவதும் ஏற்பட்டுவரும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாம் தற்போது முக்கியகட்டத்தில் இருக்கிறோம்.

* கரோனா பாதிப்பு தொடங்கிய போது நம்மிடம் பிபிஏ கிட்கள் கிடையாது. ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு 2 லட்சம் கிட்களை நாமே தயாரிக் கிறோம்.

* கரோனாவுக்கு எதிரானபோரில் நாம் கட்டாயம் வெற்றிபெறுவோம். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம். தொடர்ந்து முன்னேறுவோம். யாரையும் சார்ந்திராமல் செயல்படுவது இந்த காலக் கட்டத்தில் நமக்கு மிகவும் அவசியமான ஒன்று. 130 கோடி இந்தியர்களும் இதற்காக உறுதி ஏற்போம்.

* கரோனா பாதி்ப்பால் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொருளாதார மீட்புக்காக 20 லட்சம்கோடி ரூபாய் மதிப்பிட்டில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் கரோனா மீட்புபணிகளுக்கு செலவிடப்படும்.

* பொருளாதார மீட்பு நடவடிக்கைான திட்டங்கள் மற்றும் ஊரடங்கு பெரும் தளர்வுகளுடன் மீண்டும் அமல்படுத்தபடும். மாநில அரசின் முடிவுகளின்படி இது இருக்கும்.

* இதுகுறித்து விரிவான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...