திருநின்றவூர் ; சமுத்திரராஜனின் மகளான லட்சுமி பரந்தாமனுக்கே தாயானது எப்படி?

திருப்பாற்கடலில் யோக நித்திரையில் கண்கள் மூடி கிடந்தார் திருமால். பக்கத்திலே திரு'வாகிய மகாலட்சுமி. மகாலட்சுமிக்கு என்ன தோன்றியதோ தெரியாது! தன் தோழிககளுடன் பூவுலகுக்கு வந்தாள். இங்கே தொண்டை நாட்டிலே அழகான ஒரு ஊரைக் கண்டாள். "இனி இங்கேயே இருப்போம்' என முடிவேடுத்துவிட்டால்

."திரு'வாகிய மகாலட்சுமி வந்து தங்கியதால் அந்த பகுதி , "திருநின்றவூர்" ஆனது.

திருமகள் மகாலட்சுமி விலகி போனால் மனிதர்கள் அழிந்து விடுவார்க ளென்பது அப்புறம்; ஆனால் அவள் கணவனான மாலவனே அயர்ந்து விடுவானென்கிறது புராணம்.

அங்கே பாற்கடலில் கண் மலர்ந்து பார்த்த கடவுள், தன் அருகே எப்போதும் அமர்ந்திருக்கும் நாயகியை காணாமல் அதிர்ச்சி யடைந்தார் . உடனே துணையை தேடி புறப்பட்டார். திருநின்றவூர் வந்தார் திருமகளைக் கண்டார்.

""தேவி! நீயெனக்குத் தாரம் மட்டும் தானா? தாயும் ஆனவள் அல்லவா? எதற்காக என்னை பிரிந்தாய்?'' என்று தனது அன்பை பொழிந்தார்!

சமுத்திரராஜனின் (லட்சுமி பாற்கடலில் பிறந்தததால் சமுத்திர ராஜன் தந்தையாகிறான்) மகளான லட்சுமி, பரந்தாமனுக்கே தாயானது எப்படி? இங்கே தாய் என்பது பத்துமாதம் வயிற்றில் சுமந்ததால் அல்ல; உள்ளத்தில் வைத்து தாங்கியதால்! ஒரு நல்ல மனைவியின் இலக்கணம் அதுதானே? இதை உலகுக்கு உணர்த்தவேதான் , ""என்னைப் பெற்ற தாயார்'' என லட்சுமியை திருமாலே அழைத்து அகம்குழைந்தார்.

அன்று முதல் திருநின்றவூர், என்பது திருமகள் மட்டும் அல்லாமல் திருமாலும் நின்ற ஊராக மாறியது. சமுத்திர ராஜனின் வேண்டு கோளுக்கிணங்க பெருமாளும், தாயாரும் இந்ததலத்தில் திருமண கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.

திருநின்றவூர் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகும். இத்தலத்தில் பெருமாள் கிழக்குநோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சிதருகிறார். பவுர்ணமி, திருவோணம்,உத்திரம், வெள்ளி, சனிக்கிழமைகள் விசேஷ நாட்களாகும்.

திருநின்றவூர்   , திவ்யதேசம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...