பிரதமர் பதவிக்கான தகுதியை சுயமாக சம்பாதித்து, அதை சாதித்தவர் மோடி

பிரதமர் பதவிக்கான தகுதியை சுயமாகசம்பாதித்து, அதை சாதித்துக் காட்டியவர் நரேந்திர மோடி’ என, மறைந்த முன்னாள் ஜனாதிபதி, பிரணாப்முகர்ஜி தன்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான, பிரணாப்முகர்ஜி, ‛தி பிரெசிடென்ஷியல் இயர்ஸ், 2012 – 17′ என்ற தலைப்பில், தன் பதவிக்காலம் குறித்த அனுபவத்தை புத்தகமாக எழுதினார். அவர் கடந்த ஆண்டு மறைந்தநிலையில், அப்புத்தகம், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில், பிரதமர் நரேந்திரமோடி குறித்து, பிரணாப் முகர்ஜி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த, 2014 லோக்சபா தேர்தல்முடிவுகள், இரண்டு காரணங்களுக்காக, வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. முதலாவது, 30 ஆண்டுகளுக்குப்பின், தேர்தலில் தீர்க்கமான முடிவினை மக்கள்வழங்கினர்.இரண்டாவது, முதல்முறையாக, லோக்சபாவில் தனிப் பெரும்பான்மை கொண்ட கட்சியாக, பா.ஜ., வெற்றிபெற்றது. அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும் என, மக்கள் விரும்பியதன் பிரதிபலிப்பாகவே இந்த வெற்றியை பார்க்கிறேன்.
மேலும், சுய லாபத்திற்காக, அரசியல் கட்சிகள் கூட்டணியை மாற்றிக்கொள்வதை கண்டு, மக்கள் விரக்தி அடைந்ததும், பா.ஜ.,வின் வெற்றிக்கு காரணம்.

ஐ.மு., கூட்டணி வெற்றிபெற்றபோது, பிரதமராக பொறுப்பேற்க சோனியா மறுத்ததை அடுத்து, அந்த பதவி, சோனியாவால் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டது. ஆனால், நரேந்திரமோடி பிரதமரானது அப்படியல்ல. பா.ஜ., தேர்தல் பிரசாரத்தை துவக்குவதற்கு முன்பே, அவர்தான் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது.அதற்கு மக்களும் ஏகோபித்த ஆதரவை அளித்தனர். பிரதமர் பதவிக்கான தகுதியை, சுயமாக சம்பாதித்து, அதை சாதித்துக்காட்டியவர் நரேந்திர மோடி.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...