பொம்மை தயாரிப்பில் சுயசார்பு-நரேந்திர மோடி

நம் நாட்டின் பொம்மை தயாரிப்புதொழிலில் எவ்வளவு வலிமை மறைந்து இருக்கிறது என்பது தெரிய வருகிறது. இந்த வலிமையை அதிகரிப்பது, அதன் அடையாளத்தை அதிகரிப்பது, சுயசார்பு இந்தியா பிரசாரத்தின் ஒருபெரிய பகுதியாகும்.

நாட்டின் முதல் பொம்மை கண்காட்சியில் நாம் எல்லாம் ஒரு அங்கமாகமாறி இருப்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

கலாசாரத்தை வலுப்படுத்த…இது ஒருவணிக அல்லது பொருளாதார நிகழ்வு மட்டுமல்ல. இது நாட்டின் பழமையான அழகான விளையாட்டு கலாசாரத்தை வலுப்படுத்துவதற்கான தொடர்புஆகும்.

பொம்மைகளுடனான நமதுஉறவு, நாகரிகத்தை போலவே பழமையானது. நமது கோவில்கள், பொம்மை தயாரிக்கும் வளமையான கலாசாரத்துக்கு சான்றாக நிற்கின்றன.

இந்தகண்காட்சியில் 30 மாநிலங்களை சேர்ந்த 1000-க் கும் மேற்பட்ட கைவினைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர், பள்ளிகள் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்கள்வரை பங்கேற்கிறார்கள் என்பது எனக்கு தெரிவிக்கப்பட்டது. உங்கள் அனைவருக்கும் இது பொம்மை வடிவமைப்புகள், புதுமை, தொழில்நுட்பம் முதல் சந்தைப்படுத்துதல், பேக்கேஜிங்வரை உங்கள் அனுபவங்களை பற்றி விவாதிக்கும் ஒரு மன்றமாக இருக்கும்.

இந்த கண்காட்சியில், ஆன்லைன் விளையாட்டு துறையின் சுற்றுச்சூழல் அமைப்பு பற்றிய அறிய உங்களுக்கு வாய்ப்புகிடைக்கும். இங்குள்ள குழந்தைகளுக்காக நிறைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதை காண விரும்பினேன்.

 

இந்திய பொம்மைககள்இந்திய வாழ்க்கை முறையின் ஒருபகுதியாக இருந்த மறுபயன்பாடு மறுசுழற்சி கலாசாரத்தை திட்டமிடுகின்றன. பொம்மை உற்பத்தியாளர்கள் குறைவான பிளாஸ்டிக்கை பயன்படுத்தவேண்டும். மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்.

சுற்றுச்சூழல் மற்றும் உளவியல் ஆகிய இரண்டுக்கும் சிறப்பான பொம்மைகளை உருவாக்கவேண்டும் என்று நாட்டின் பொம்மை உற்பத்தியாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். பொம்மைகளில் நாம் குறைவான பிளாஸ்டிக்கை பயன்படுத்தி, மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களை அதிகமாக பயன்படுத்தலாமா?

பொம்மை தயாரிப்பு துறையில் நாம் சுயசார்பு அடைய வேண்டும்.

கடந்த 70 ஆண்டுகளில் இந்தியகலைஞர்களின் பாரம்பரியம் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. இறக்குமதி செய்யப்படுகிற பொம்மைகள், வெளிப்புற எண்ணங்களை அவற்றுடன் கொண்டுவந்தன. நாம் இந்த சூழ்நிலையை ஒன்றிணைந்து மாற்ற வேண்டும். உள்ளூர் தயாரிப்புகளுக்காக நாம் கூடுதல் குரல்கொடுக்க வேண்டும்.

பொம்மை திரள்களை உருவாக்குவதில் மாநிலங்களுக்கு சமமான பங்களிப்பு உண்டு.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...