புதுவை அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி;-கருத்து கணிப்பு

பாஜகவின் விஸ்வரூபத்தால் தனதுகோட்டையாக விளங்கிய கங்கிரஸின் நிலைமை பெரும் கலக்கத்தில் உள்ளது. அங்கு என்ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு வராவிட்டாலும் அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சிஅமைப்பது உறுதி என சர்வேமுடிவுகள் அடித்துகூறுகின்றன.

மோடி வருகையையொட்டி பாஜக புதுச்சேரியில் எழுச்சிபெற்றுள்ளது. என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பாஜக புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் களம்காணும் என எதிர்பார்த்த நிலையில், ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாரகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரங்கசாமி கூட்டணிக்கு வராவிட்டாலும் பாஜகவும், அதிமுகவும் அமைத்துள்ளகூட்டணி அமோக வெற்றி பெறும் என பெங்களூருவை சேர்ந்த ரெனைசென்ஸ் பவுண்டேசன் புதுச்சேரியில் நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தநிறுவனம் சிலநாட்களுக்கு முன் சர்வே எடுத்த முடிவுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, என்.ஆர்.காங்கிரஸ் தனித்துநின்று போட்டியிடால் ஒருதொகுதியில் மட்டுமே வெல்ல முடியும். அதேவேளை பாஜக – அதிமுக கூட்டணி 23 இடங்களை பிடித்து ஆட்சியமைக்கும் எனத் தெரியவந்துள்ளது. முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் – திமுககூட்டணி 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடியும். ஒருதொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றிபெறும் என அந்த் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. பாஜக மட்டும் தனியாக 9 தொகுதிகளில் வெல்லும் என சர்வேமுடிவுகள் கூறுகின்றன. அதன்படி காமராஜர் நகர்தொகுதி, எம்பலம் தொகுதி, முத்தையால் பேட்டை, காலாப்பேட்டை, நெடுங்காடு, காரைக்கால் தெற்கு, திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, மாஹி ஆகிய தொகுதிகளில் பாஜக தனித்து நின்றாலும் இந்த ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெறும் என அந்தசர்வே முடிவுகள் கூறுகின்றன.

அதேவேளை திமுக தனித்து நின்றால் ஓரிடத்தில் கூட வெற்றிபெற முடியாது என்பதும் தெரியவந்துள்ளது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...