குமரி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி அமைக்க முயற்சி செய்வேன் என நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில்போட்டியிடும் பாஜக வேட்பாளர் எம்ஆர் காந்தி உறுதியளித்துள்ளார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்றதொகுதி பாஜக வேட்பாளராக மூத்த பாஜக உறுப்பினர் காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து அவரை பாஜக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்கூறினார்.
அப்போது அவர் கூறியதாவது, என்னை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்த பாஜக தேசிய மாநில, மாவட்டத் தலைமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக அதிமுக உடன் கூட்டணி அமைத்துதேர்தலை சந்திக்கிறது. பாஜக அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். நானும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெறுவேன்.
குமரி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரியும், அரசு நர்சிங் கல்லூரியும் இல்லை என்ற குறை உள்ளது. இந்த குறையை போக்கி அரசு சட்டக்கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி அமைக்க முயற்சிப்பேன். நாகர்கோவிலில் இருக்கும் தண்ணீர் பஞ்சத்தைபோக்க புதிய திட்டங்களை உருவாக்கி தொகுதி மக்களுக்கு தாராளமாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர்கூறினார்.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |