சமூக நல்லிணக்கத்தினை வலியுறுத்தி, தர்மபுரியை சுற்றி இருக்கும் மாவட்டங்களில் பிப்ரவரி இறுதியில் பாத யாத்திரையை நடத்த உள்ளதாக பா.ஜ.க,, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது. தமிழக அரசின் ஒரு வருட நிலைப்பாட்டினை , கவர்னரின் உரை வெளிப்படுத்துகிறது. விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களுக்காக, கர்நாடகாவிடம் இழப்பீடுகோரி வழக்குதொடர, அரசு தயாராகி வருகிறது. இதிலிருந்து, விவசாயிகள் இழப்புக்குள்ளாகி உள்ளதை , அரசு தெரிந்துள்ளது. விவசாயிகளுக்கு, இழப்பீடு முன்பணம் வழங்கவேண்டும்.
மதுரையில் பயங்கரவாதிகளின் நடமாட்டம், வெடிகுண்டுசோதனை நடப்பது தெரிந்தும், நடவடிக்கை இல்லை. அரசியல் தலைவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதும் , கொலைசெய்யப்படுவதும் சாதாரணமாகி விட்டது. பலவழக்குகளில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
சிறையில் இருந்தபடியே குற்றவாளிகள், கொலைகளில் ஈடுபடுவது மக்களை அதிர்ச்சிகுள்ளாக்கி உள்ளது . சட்ட ஒழுங்கை காக்கும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
குறைவான மழைப்பொழிவை கொண்ட குஜராத்தில், தண்ணீர் பற்றாக்குறை உருவாகாமல் சமாளிக்கப்படுகிறது. தமிழகத்தில் போதிய மழைபெய்தும், தண்ணீரை சேமிப்பதற்கு தடுப்பணைகள், அணைகள் கட்டப்படவில்லை. பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங், பிப்., 7 ம் தேதி , சென்னை வருகிறார். சமூக நல்லிணக்கத்தினை வலியுறுத்தி, தர்மபுரியை , சுற்றி இருக்கும் மாவட்டங்களில் பாதயாத்திரை செல்ல உள்ளேன் என்றார்.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.