விவிஐபி சாப்பர் ஹெலிகாப்டர் பேரத்தை யார் இறுதி செய்தது?

 விவிஐபி சாப்பர் ஹெலிகாப்டர் பேரத்தை யார் இறுதி செய்தது? மூன்றாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள 12 ஏவிடபிள்யு101 ஹெலிகாப்டர்களை அரசு வாங்கிய விவகாரத்தில் வழங்கப்பட்ட லஞ்சங்கள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் காலவரையறைக்குட்பட்ட சிபிஐ விசாரணை ஒன்றை பாஜக கோருகிறது. நீதிமன்ற கண்காணிப்பு இல்லாமல் ஐக்கிய முற்போக்குக்

கூட்டணி ஆட்சியில் எந்த பலனும் கிடைக்காது. 2ஜி அலைக்கற்றை விவகாரம் போன்ற பெரும் ஊழல் வழக்குகளைப் பொறுத்தவரை பொதுமக்களிடமிருந்து எழுந்த அழுத்தத்தின் காரணமாகவே காங்கிரஸ் விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால் தொடர்ந்து விசாரணையை தாமதப்படுத்தியது. உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து 2 ஜி ஊழல் விசாரணையைக் கண்காணிக்கத் தொடங்கிய பின்தான் விசாரணையில் பலன்கள் கிடைக்கத் தொடங்கின. இல்லையெனில் ஒன்றுக்கும் பயனில்லாத விசாரணையாக 15 மாதங்கள் நீண்டிருக்கும்.

விவிஐபிக்களுக்கான ஹெலிகாப்டர் வாங்கிய விவகாரத்தில் சரியான விசாரணையை மத்திய அரசு தவிர்ப்பதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இத்தாலிய மற்றும் இந்திய ஊடகங்களில் சென்ற ஆண்டின் இறுதியிலேயே இந்த விவகாரம் தொடர்பாக கொடுக்கப்பட்ட லஞ்சங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்துவிட்டன. அந்த செய்திகள் வெளியானபின்னர் இத்தாலிய அரசு அந்த விவகாரத்தைத் தீவிரமாக எடுத்து விசாரிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் இந்திய அரசோ எந்த விதத் தீவிர விசாரணையையும் மேற்கொள்வதில் ஈடுபாடே காட்டவில்லை. இத்தனைக்கும் அரசின் உள்மட்ட விசாரணைக் குழுவினர் இந்த பேரம் நியாயமாகவே நடந்தது என்று சான்றளிக்கத் தயாராக இருப்பதாக விவரங்கள் கூறுகின்றன. பாதுகாப்பு அமைச்சகத்தின் உள்மட்ட விசாரணை விவரங்களை பாஜக கோருகிறது. இந்த பேரத்தில் எந்த தவறுகளும் நடக்கவில்லை என்று அரசு எப்படி முடிவுக்கு வந்தது?

இந்த விசயத்தில் சுவாரசியமானது என்னவெனில், மாநிலங்களவையில் சென்ற ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி நான் கேட்ட கேள்விக்கு அரசு உள்மட்ட விசாரணையைப் பற்றி எந்தக் குறிப்பும் தரவில்லை. எந்தக் குறிப்பிட்ட தகவலும் இல்லாத நிலையில் அரசு இந்த விஷயம் தொடர்பாக எந்த விசாரணையையும் எந்த அமைப்பையும் கொண்டு செய்யவில்லை என்று பதில் கூறப்பட்டது. உண்மையிலேயே அரசு நினைத்தால் கிடைக்கும் தகவல்களிலிருந்து விசாரணையைத் தொடங்க முடியும். இத்தாலியில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வர வேண்டிய அவசியம் இல்லை.

ஹஸ்கே மற்றும் அவரது சகாவான கெரோசா ஆகியவர்களுக்கு இடையே நடந்த உரையாடல் பதிவுகள் பொதுவெளியில் நான்கு மாதங்களாக உள்ளன. இந்திய அரசு அதைப் பற்றி எந்தக் கவலையும் படவில்லை.

சந்தேகத்துக்குரிய இந்த பேரத்தில் அரசு காண்பிக்கும் அலட்சிய அணுகுமுறையால் இந்த ஊழலுடன் தொடர்புடையவர்களில் ஒருவரான பின்மெக்கானியாவின் இந்தியத் தலைவர் இந்நாட்டிலிருந்து வெளியேறும் வாய்ப்பு உள்ளது.

பாதுகாப்பு அமைச்சகரகம் தனது தவறை ஒப்புக்கொள்ளாமல் பிரச்னையைத் திசைதிருப்ப தொழில்நுட்ப விவரங்களைச் சொல்லி தேவையில்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணியையும் இந்த விவகாரத்தில் இழுக்கிறது. தொழில்நுட்ப விவரங்கள் தொடர்பான பிரச்னை அல்ல இந்த பேரம். அந்த பேரத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்ட லஞ்சங்கள் தொடர்பானது. சரியான நேரத்தில் விசாரணை நடத்தாமல், இந்தியர்களில் யார் பயன்பெற்றார்கள் என்பதை கண்டுபிடிக்காமலும் அரசு தோல்வியுற்றுள்ளது.

காங்கிரஸ் அரசு கழுத்தளவு லஞ்சத்தில் புதைந்துவிட்டது. காமன்வெல், 2ஜி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, கடன் தள்ளுபடி என்று ஊழல்களே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முத்திரை ஆகிவிட்டது. தற்போது வெடித்துள்ள விவிஐபி சாப்பர் ஹெலிகாப்டர் பேர சர்ச்சை குறித்து அரசு பதில் சொல்ல வேண்டும்.

1.விவிஐபி சாப்பர் ஹெலிகாப்டர் பேரத்தை யார் இறுதி செய்தது? யார் கையெழுத்திட்டது?

2. யார் லஞ்சத்தொகைகளைப் பெற்றது?

3. இத்தாலிய குற்றப்பத்திரிக்கையில் இரண்டு இடங்களில் 'த பேமிலி' என்று குறிப்பிடப்பட்டு 28 மில்லியன் ஈரோக்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது? யார் அந்தக் குடும்பம் என்பதை அறிய தேசம் விரும்புகிறது?

4.ஹஸ்கே மற்றும் எமார் எம்ஜிஎப் ஆகியவர்களுக்கு இடையிலான தொடர்பு  என்ன?

5. சாப்பர் ஹெலிகாப்டர் ஊழலில் ஐடிஎஸ் இன் பங்கு மற்றும் நிலை என்ன?
6. இந்த ஊழல் தொடர்பாக விசாரிக்க அரசு நீதி உதவி கோரிக்கை கடிதத்தை வெளியிட்டதா?

நன்றி ; திரு. ப்ரகாஷ் ஜாவேத்கர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...