நான்கு யோகங்கள்

 நான்கு யோகங்கள் முக்தியே நமது முக்கிய லட்சியம். நம்மை நாம் தனிப் பரம்பொருள் என்று உணரும்வரை நாம் அதனைப் பெற முடியாது. இந்த அனுபூதியை அடையப் பல நெறிகள் உள்ளன. இந்த நெறிகள் பொதுவாக 'யோகம்' (யோகம்= சேர்த்தல்: நம்மை நமது உண்மை நிலையில் சேர்த்தல்) என்று அழைக்கபடுகின்றன. இவை பலவாகப் பிரிக்கபட்டிருந்தாலும், குறிப்பாக

நான்கு நெறிகளாக இவற்றை வகுக்கலாம். இவை ஒவ்வொன்றும் நம்மை அந்தத் தனிப் பரம்பொருளின் அநுபூதி நிலைக்கு மறைமுகமாக அழைத்துச் செல்லும் வழிகள் மட்டுமே, எனவே மனிதர்களின் பல்வேறு இயல்புகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன.

இங்கு ஒன்றை நினைவில்கொள்வது அவசியம்; சாதாரண மனிதன், தனது முயற்சியால் உண்மை மனிதனாகிய பரம்பொருள் ஆகிறான் என்பது இல்லை. அது எப்போதும் சுதந்திரமாக, பரி பூரணமாக உள்ளது. ஆனால் அதன் இயல்பைத் தற்காலிகமாக மறைத்துள்ள அஞ்ஞானம் நீக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு நெறியைக் குறிக்கிறது. யோக நெறிகள் ஒவ்வொன்றின் முழு நோக்கமும் இந்த அஞ்ஞானத்தை நீக்கி, ஆன்மா தனது சொந்த இயல்பை மீண்டும் பெறச் செய்வதே. இதற்கு பயிற்சியும் வைராக்கியமும் முக்கியத் துணைகள். வைராக்கியம் என்பது வாழ்க்கையில் பற்றற்ற தன்மை. வாழ்க்கையில் நாம் வைத்திருக்கும் பற்றே, இன்ப நுகர்ச்சியில் நாம் கொள்ளும் விருப்பமே பந்தத் தொடரின் காரணம். பயிற்சி என்பது எதாவது ஒரு யோகத்தை இடைவிடாமல் பழகுவதே…

கர்மயோகம்: தனது கடமைகளைச் செய்வதாலும் அதற்குரிய செயல்களை ஆற்றுவதாலும் இறை உணர்வைப் பெறுவது.

பக்தியோகம்: தனது அந்தரங்கமான பக்தி உணர்வால், இறைவனை நினைத்து அவரைத் தனக்கே உரியவராக அடைய முற்படுவது.

ராஜயோகம்: மனத்தைக் கட்டுப்படுத்தி, உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்தி இறைவன்பால் தனது சிந்தனையை வழிப்படுத்தி, இறை உணர்வைப் பெறுவது.

ஞானயோகம்: தனது அறிவாற்றலால் பல்வேறு சாஸ்திர நூல்களைப் படித்தும் ஞானபோதனைகளைப் பெற்றும், இறைவனை உணர்ந்து அவரை அடைய முற்படுவது.

—சுவாமி விவேகானந்தர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...