மோடியின் பெயர் முன்னிறுத்த படுவதால், எந்த சர்ச்சையும் இருப்பதாக கருதவில்லை

மோடியின் பெயர் முன்னிறுத்த படுவதால், எந்த சர்ச்சையும் இருப்பதாக  கருதவில்லை தே.ஜ., கூட்டணியில், கட்சிகள் மேலும் சேருவதால், பலன் அடைவதையே விரும்புகிறோம்; மோடியின் பெயர் முன்னிறுத்த படுவதால், எந்த சர்ச்சையும் இருப்பதாக, நாங்கள் கருதவில்லை. என்று பா.ஜ.க., மூத்த தலைவர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, அருண்ஜெட்லி, பெங்களூரில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட மாட்டார் என,பா.ஜ.க., முன்னாள் தலைவர் நிதின்கட்காரி, பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு உறுதியளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதுதான் சிக்கலுக்கு காரணமானது. கட்டுப்பாடான கட்சியை நாங்கள் நடத்துகிறோம்.பிரதமர்வேட்பாளர் தொடர்பாக, கட்சி முடிவுஎடுத்தால் மட்டுமே, அதுகுறித்து கருத்துதெரிவிக்க முடியும்.

தே.ஜ.,கூட்டணியில், கட்சிகள் மேலும் சேருவதால், பலன் அடைவதை விரும்பு கிறோம்; அதற்காக எந்ததியாகமும் செய்வோம் என்று அர்த்தமல்ல. இப்போதைக்கு அதுகுறித்து , கருத்து எழவில்லை. எங்கள் வேட்பாளர் குறித்து, நாங்கள் முடிவுசெய்யும் போது, அதுபற்றி தெரிவிப்போம்.

மோடியின் பெயர் முன்னிறுத்தப் படுவதால், எந்த சர்ச்சையும் இருப்பதாக, நாங்கள் கருதவில்லை . நரேந்திரமோடி, மிகவும் புகழ்பெற்ற தலைவரே. இதனால், நாங்கள் பெருமிதம் அடைகிறோம். 3வது அணி என்பது, தோற்றுப்போன விஷயம். கூட்டணி அரசு எனும் யுகத்தில் இருக்கிறோம். நாங்களும் இதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். என்று அருண் ஜெட்லி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...