மத்திய அரசு நாடாளுமன்றத்துக்கு வெளியே ஊழல் மிகுந்ததாகவும், நாடாளுமன்றத்துக்கு உள்ளே அடக்கு முறையை கையாள்வதாகவும் உள்ளது என்று அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்
இது குறித்து அருண்ஜேட்லி மேலும் கூறியதாவது : எந்த அடிப்படையில் சுரங்கஒதுக்கீடு பெற்றவர்களின் பெயர்களை நீக்க அமைச்சர் வழியுறுத்தினர் என்பது தெரியவில்லை. சென்ற 2004-ம் வருடம் சிஏஜி பரிந்துரைபடி ஏன் சுரங்கஒதுக்கீடு ஏலம் நடத்தப் படவில்லை .
சிபிஐ விசாரணை அறிக்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் செயல்பாடுகள் தொடர்பாகதான் விசாரணை நடந்தது. ஆனால் விசாரணை அறிக்கையையே குற்றம் சாட்டப் படுவோருக்கு தொடர்புடைய வர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேஅமைச்சர் பன்சாலின் உறவினர் சிங்லா ஒருஅதிகாரிக்கு பதவிஉயர்வு வாங்கித்தருவதற்காக லஞ்சம் பெற்றுள்ளார். இதற்காக கோப்புகள் அழகாக நகர்த்தப்பட்டு பணம்பெறப்பட்டுள்ளது.
லஞ்சம்வாங்கியவர் ரயில்வே அமைச்சரின் நெருங்கிய உறவினர். எனவே மூன்றாம் நபர்களுக்கு எவ்வாறு லஞ்சம்தரப்படும். மத்திய அரசு நாடாளுமன்றத்துக்கு வெளியே
ஊழல் மிகுந்ததாகவும், நாடாளுமன்றத்துக்கு உள்ளே அடக்கு முறையை கையாள்வதாகவும் உள்ளது என்றார் ஜேட்லி.
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.