சீக்கியர் கலவரவழக்கு விவகாரத்தில் நீதி வழங்கவேண்டும்

  சீக்கியர் கலவரவழக்கு விவகாரத்தில் நீதி வழங்கவேண்டும் தில்லி  சீக்கியர் கலவரவழக்கு விவகாரத்தில் நீதி வழங்கவேண்டும் எனக்கோரி குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜியை -பாஜக. சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட அனைத்துக் கட்சி குழுவினர் சந்தித்தனர்.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கொலையை தொடர்ந்து தில்லியில் நடந்த கலவரங்களில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப் பட்டனர். இந்நிலையில் சீக்கியர் கலவரவழக்கு ஒன்றில் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் அண்மையில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்புதெரிவித்து தில்லியில் சீக்கியர்கள் தொடர்போராட்டங்கள் மேற்கொண்டுள்ளனர்.

தில்லியில் நடந்த கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதிகிடைக்க வேண்டும்.

இதற்காக குடியரசு தலைவர் தலையிட்டு உச்ச நீதிமன்ற மேற்பார்வையிலான சிறப்புவிசாரணை குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தி பிரணாப்முகர்ஜியிடம் சிரோமணி அகாலிதளம்-பாஜக. உயர்நிலை தலைவர்கள் உள்பட தெலுங்குதேசம், ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா, சிவசேனை, சமாஜவாதி கட்சி, இந்தியதேசிய லோக்தளம், பிஜு ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளின்சார்பில் மனு அளிக்கப்பட்டது.

பஞ்சாப் முதல்வர் பாதல் அழைப்பின்பேரில் பாஜக. மூத்த தலைவர் எல்கே. அத்வானி, எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மாஸ்வராஜ் ஆகியோரும் குடியரசுத் தலைவரை சந்தித்துப்பேசினர்.

சீக்கிய கலவரங்கள் தொடர்பாக சுதந்திரமான நேர்மையானவிசாரணை நடத்தவேண்டும். இதற்காக உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் சிறப்பு விசாரணை குழுவை ஏற்படுத்தவேண்டும். கலவரங்களில் காவல் துறை அதிகாரிகளின் பங்கு தொடர்பாக விசாரிக்கவேண்டும். குற்றம் சுமத்தப்பட்டோர் விடுவிக்கப் பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தவேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...