கோவாவில் வெள்ளிக்கிழமை நடந்த பா.ஜ.க நிர்வாகிகள்குழு ஆலோசனை கூட்டத்தில் மூத்த தலைவர் எல்கே.அத்வானி உடல் நலகுறைவு காரணமாக பங்கேற்கவில்லை. குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் தருவதால்தான் இந்த கூட்டத்தை அத்வானி புறக்கணிப்பதாக ஊடகங்கள் புரளி கிளப்புகின்றன.
இந்நிலையில் இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் சுதான்ஷீ திரிவேதி கூறியதாவது:
பா.ஜ.க.,வில் மோடி ஓர் அணியாகவும் அத்வானி ஓர்அணியாகவும் செயல் படுவதாக பலர் வதந்திகளை பரப்பிவருகின்றனர். பா.ஜ.க.,வில் மோடி அணி, அத்வானி அணி என்றெல்லாம் ஏதும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாகத் தான் செயல்படுகிறோம். அத்வானிக்கு ஆதரவாக சுஷ்மாஸ்வராஜ் செயல்படுவதாக கூறுவதிலும் உண்மை இல்லை. ஊடகங்கள்தான் இதுபோன்ற தகவல்களைப் பெரிதுபடுத்துகின்றன.
பாஜகவின் தேசியசெயற்குழு கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்படும் என்பது குறித்தும் பலயூகங்கள் வெளிவருகின்றன. தேசியசெயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் அனைத்துமுடிவுகளையும் வெளியிடத்தான் போகிறோம். அது வரை பொறுமைகாக்க வேண்டும் என்றார்.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.