குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மீது, காங்கிரஸ்க்கு இருக்கும் வெறுப்பின் காரணமாகவே, சிபிஐ., மூலம் அவருக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகிறது,” என்று பாஜக செய்தித்தொடர்பாளர், ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரத்ஜஹான் , சோராபுதீன், என்கவுன்டர்’ வழக்குகளை விசாரித்துவரும், சிபிஐ., அமைப்பு அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியை, அந்த வழக்குகளில் சிக்கவைக்க முயற்சி செய்து வருகிறது.
இது குறித்து , பா.ஜ.க., செய்தித்தொடர்பாளர், ரவிசங்கர்பிரசாத் நேற்று கூறியதாவது:
நரேந்திர மோடியை, குஜராத்மக்களும், பிற மாநிலத்தவர்களும், சிறந்தநிர்வாகி என்றும், குற்றமே காணமுடியாதவர் எனவும் பாராட்டுகின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சியோ, அவர்மீது கொண்ட வெறுப்புணர்வு காரணமாக, சிபிஐ., மூலம் இடையூறு ஏற்படுத்தமுயல்கிறது.
சிபிஐ., அமைப்பு, கூண்டுக்குள் சிக்கியகிளி போன்று உள்ளது என, சுப்ரீம்கோர்ட் சமீபத்தில் கண்டனம்தெரிவித்ததை, அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். என்று அவர் கூறினார்.
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.