பேரவை தேர்தலில் அ,தி,மு,க கூட்டணிக்கு ஆதரவு இல்லை

பேரவை தேர்தலில் அ,தி,மு,க கூட்டணிக்கு ஆதரவு இல்லை என்று , இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன் தெரிவித்துள்ளார் .

  திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

இந்துக்களின் நலன், உரிமை, பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும்

கட்சிக்குத்தான் பேரவை தேர்தலில் இந்து முன்னணி ஆதரவு அளிக்கும். அ.தி.மு.க கூட்டணியில் இந்து-விரோத சக்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே அக்கூட்டணிக்கு நாங்கள் ஆதரவு அளிக்க போவதில்லை.

பள்ளிகளில் அனைத்து-மாணவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஆனால் இப்போது சிறுபான்மையின மாணவர்களுக்கு அதிகசலுகைகளும், முக்கியத்துவமும் அளிக்கப்படுகின்றன. இந்து மாணவர்களுக்கு சலுகைகளோ, முக்கியத்துவமோ வழங்கப்படுவது இல்லை.

இதன் பாதிப்பு வரும் பேரவை தேர்தலில் எதிரொலிக்கும். இந்துக்கோயில் சொத்துகலை ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும், இந்துவிரோத நடவடிக்கைகளுக்கும் மத்திய மற்றும் மாநிலஅரசுகள் தொடர்ந்து ஆதரவு-தெரிவித்து துணை போகின்றன.

திருநெல்வேலி பேட்டையில் அரசு-அதிகாரிகளால் அகற்றப்பட்ட பூலுடையார்சாஸ்தா கோயிலை அரசு மீண்டும் அமைத்து தர வேண்டும்.

பாபநாசம் , விக்கிரமசிங்கபுரம்,கோயிலுக்கு சொந்தமான 30ஏக்கர் நிலத்தை தனியார் பள்ளிகள் ஆக்கிரமித்துள்ளன. அந்த நிலங்களை அரசு உடனடியாக மீட்க வேண்டும்.

இதேபோல, மாநிலத்தில் இருக்கும் பல கோயில்களின் சொத்துகளில் முறைகேடுகள் நடைபெறுகிறது . நிலங்கள் ஆக்கிரமிக்கபடுகின்றன. இதை கண்டித்து மிகபெரியளவில் போராட்டம் நடத்தவுள்ளோம். இவ்வாறு ராம. கோபாலன் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...