உள்ளூர் நிர்வாகத்தின் மீது அனைத்து குற்றச் சாட்டையும் திணிக்க ரெயில்வே முயற்சி

 பீகாரின், டாமராகாத் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்கமுயன்ற சிவபக்தர்கள் மீது அதிவேகரெயில் மோதியது. இதில் 37 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ரெயில்டிரைவரை அடித்து உதைத்ததுடன், ரெயிலுக்கும் தீவைத்தனர்.

மாநிலத்தையே உலுக்கிய இந்தவிபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தவேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மேல் சபை பா.ஜ.க துணைத்தலைவர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், “25 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 37பேரை பலிவாங்கிய இந்தசம்பவத்திற்கு பா.ஜ.க தனது இரங்கலையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறது. ஆனால், இந்தவிபத்து தொடர்பாக சிலகேள்விகளும் கேட்க வேண்டியுள்ளது.

இந்தமாதத்தில் ஏராளமான மக்கள் அங்குள்ள தண்டவாளத்தை கடந்துசெல்வார்கள் என்ற உண்மையை உள்ளூர்நிர்வாகம் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று ரெயில்வேயின் வாதத்தை ஏற்கமுடியாது. உள்ளூர் நிர்வாகத்தின் மீது அனைத்து குற்றச் சாட்டையும் திணிக்க ரெயில்வேநிர்வாகம் முயற்சிக்கிறது. இது போன்ற தகவல்களை ரெயில்வே தெரிந்திருக்கவேண்டும்.

நடந்த சம்பவம் தொடர்பாக தீவிரவிசாரணை நடத்துவதுடன், பணியில் அலட்சியமாக இருந்த அதிகாரிகளை தண்டிக்கவேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு போதிய நிவாரணம் வழங்கவேண்டும். காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...