விரக்தியின் வெளிப்பாடே ராகுலின் பேச்சு

விரக்தியின் வெளிப்பாடே  ராகுலின்  பேச்சு விரக்தியின் வெளிப்பாடாகவே ராகுல்காந்தியின் பேச்சு அமைந்துள்ளது. பாஜக பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடியின் செல்வாக்கு வளர்ந்துவருவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. என பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, “எனது பாட்டி, தந்தையைப் போல நானும் கொல்லப்படலாம்’ என்று பேசினார். அத்துடன் பாஜக பிரிவினைவாத அரசியலில் ஈடுபட்டுவருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான வெங்கய்ய நாயுடு ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விரக்தியின் வெளிப்பாடாகவே ராகுல்பேச்சு அமைந்துள்ளது. பாஜக பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடியின் செல்வாக்கு வளர்ந்துவருவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால், இது போன்று உணர்வு பூர்வாகப் பேசுவதுடன் பொய்யான தகவல்களையும் பரப்பி வருகின்றனர்.

கடந்தகால நிகழ்வுகளை பேசுவதன் மூலம் அனுதாபத்தை திரட்டும்முயற்சியே இது. அவர்களது தோல்விகளுக்கு அவர்களிடம் எந்தவிளக்கமும் இல்லை. பா.ஜ.க.,வின் வளர்ச்சியை சந்திக்கும்திறன் காங்கிரஸிடம் இல்லை. அதற்கும்மேல், வலுவான, துடிப்புமிக்க தலைமை இல்லை. அதனால் தான், இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் கொல்லப்பட்டனர் என்பதைக் கூறி அனுதாபம் பெற முயற்சிக்கின்றனர்.

பிரிவினைவாத, வகுப்புவாத சூழ்நிலை அதிகரிப்பதாக ராகுல்கூறுகிறார். இதற்குகாரணம் யார்? தீவிரவாதம் வளர்ந்ததற்குகாரணம் யார்? சந்தேகமில்லாமல் காங்கிரஸ்தான். தேசவிரோத சக்திகளிடம் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்தது காங்கிரஸ். அகாலிகளை வலுவிழக்கச்செய்ய பிந்தரன் வாலேவை ஊக்குவித்தது காங்கிரஸ்.

முஸ்லிம்லீகுடன் கைகோத்தது. ஒவைஸி, ஷகா புதீனுடன் நட்புறவுகொண்டது. வகுப்புவாத அரசியலை ஊக்குவித்ததே காங்கிரஸ்கட்சிதான். இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பியதன் மூலம் இந்திய வீரர்களின் இறப்புக்கும் காங்கிரஸ்தான் காரணமானது.

வகுப்புவாத தடுப்பு மசோதாவை கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. சிறுபான்மையினரை தங்கள்பக்கம் கொண்டுவருவதற்கான முயற்சியே இது. சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்காக காங்கிரஸ் எதுவும்செய்யவில்லை என்பதையே ரங்கனாத்மிஸ்ரா, சச்சார் கமிட்டியின் பரிந்துரைகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

அப்பாவி முஸ்லிம்கள் தண்டிக்கப்படக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அண்மையில் மாநிலஅரசுகளுக்கு கடிதம் எழுதினார். இதுவும் சிறுபான்மையினரை தங்கள்பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கையே.

இந்த எல்லாமுயற்சிகளும் சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்கானது அல்ல. தாற்காலிகமாக அவர்களை தங்கள்பக்கம் இழுத்து வாக்குகளை பெறுவதற்காகவே. இதுதான் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கானவழியா?

1967 முதல் நாட்டில் நடந்த கலவரங்களில், – 2002 குஜராத்கலவரம் உள்பட – பா.ஜ.க ஆட்சியை விட, காங்கிரஸ் ஆட்சியில் தான் அதிகபட்சம்பேர் இறந்திருக்கிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்றார் வெங்கய்யநாயுடு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...