பெங்களூர் பாஜக பேரணிக்கு சிறப்பு பாதுகாப்பு செய்யவேண்டும்

 பெங்களூருவில், மாநில பாஜக., சார்பில் அடுத்த மாதம், மாபெரும்பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பாஜக., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி உரையாற்றுகிறார். இதற்காக, சிறப்புபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என, மாநில அரசிடம் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சிசெய்து வருகிறது. இதற்குமுன், ஆட்சியில் இருந்த, பாஜக ., உட்கட்சி பூசல்களால், மாநிலத்தில் ஆட்சியை இழந்தது. லோக்சபாதேர்தலை முன்னிட்டும், மாநிலத்தில் கட்சியை பலப்படுத்தவும், அடுத்தமாதம், 17ம் தேதி, பெங்களூரில், மாநில பா.ஜ., சார்பில், மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பாஜக ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி உரையாற்றுகிறார். பீகாரில், நரேந்திரமோடி கலந்துகொண்ட கூட்டத்தில், வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஆறுபேர் பலியாயினர்; 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல், மோடியை குறிவைத்தே நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், பாஜக .,வினர் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே, ‘மோடி, பெங்களூருவில் பங்கேற்கும்பேரணிக்கு, பலத்த பாதுகாப்பு அளிக்கவேண்டும்’ என, ஆளும் அரசிடம் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, பாஜக., செய்தித்தொடர்பாளர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: பீகார் குண்டு வெடிப்பு போல், மற்றொருசம்பவம் நடைபெற கூடாது. எனவே, பெங்களூருவில் நடைபெறவுள்ள பேரணிக்கு பலத்தபாதுகாப்பு அளிக்குமாறு, மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். என்று ஜாவடேகர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...