மிசோரமிலும் ஆளும் காங்கிரஸ்க்கு பெரும்பின்னடைவு ஏற்படும் என்றும் அம்மாநிலத்தில் தொங்கு சட்ட சபைதான் அமையும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் (எக்ஸிட்போல்) தெரிவிக்கின்றன.
டெல்லி, சத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தான் மற்றும் மிசோரம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்ட சபைகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் பதிவானவாக்குகள் வரும் 8-ந்தேதி எண்ணப்படுகின்றன.
இந்ததேர்தலில் காங்கிரஸ் , ராஜஸ்தான் , டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுக்கிறது. பாஜக ஆளும் மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களை அக்கட்சி தக்கவைத்து கொள்ளும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
காங்கிரஸ் வசம் உள்ள காங்கிரஸின் மானத்தை காக்கும் என்று கருதப்பட்ட மாநிலமான மிசோரமும் காங்கிரசை கைவிட்டுவிடும் என்று தெரிகிறது. அங்கு தொங்கு சட்டசபைக்கே வாய்ப்பிருப்பதாக எக்ஸிட் போல்-ல் தெரிவிக்கிறது.
40 தொகுதிகளைகொண்ட மிசோரமில் ஆளும் காங்கிரஸுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 18 இடங்கள்மட்டும்தான் கிடைக்குமாம். மிசோரம் தேசியமுன்னணி 15 இடங்களை கைப்பற்றும் என்பதால் தொங்கு சட்ட சபைக்கே வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.