பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சிக்குவந்தால் பல்வேறு வரிகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்

 மத்தியில் மீண்டும் ஆட்சிக்குவந்தால், வருமானவரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என பாஜக முன்னாள் தேசிய தலைவர் நிதின்கட்கரி அறிவித்துள்ளார் :

சண்டீகரில் புதன்கிழமை நடைபெற்ற வர்த்தகசங்க கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது;

வருமானவரி, வணிகவரி, சுங்கவரி, மாவட்ட நிர்வாகம் வசூலிக்கும் உள்ளுர்வரி ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று பா.ஜ.க.,விடம் கோரிக்கை வந்துள்ளது. அதற்கு பதிலாக, வர்த்தகப் பரிவர்த்தனைக்காக வரி விதிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஒருவர் புதிதாக கார்வாங்கினாலோ, உணவுவிடுதிக்கு சென்றாலோ, அங்கு அவர்கள் செலவிடும் தொகையில், 2 சதவிதம்வரி விதிக்கப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்பட்டால், நமதுநாட்டிற்கு 40 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். அதாவது வரிகள் மூலம் தற்போது கிடைக்கும் 14 லட்சம்கோடி ரூபாயைவிட பலமடங்கு அதிக வருமானம் கிடைக்கும்.

இதன் மூலம் நாட்டில், கருப்புபணப் புழக்கம் தடைபடும். மேலும், வணிகர்களும் அரசு கண்காணிப்பில் இருந்து விடுபடமுடியும். மத்தியில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்குவந்ததும், அது குறித்து பரிசீலனைசெய்து உரியநடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் கள்ள நோட்டுக்களை ஒழிப்பதற்காக பிளாஸ்டிக் அல்லது சணலால் ரூபாய் நோட்டுகளை தயாரிப்பதுதொடர்பான திட்டமும் பா.ஜ.க.,விடம் உள்ளது .

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஊழல்கள், வேலையில்லாத் திண்டாட்டம், பண வீக்கம் அதிகரித்துவிட்டது. இந்த பிரச்னைகளை கையாள்வதில் ஐ.மு., கூட்டணி அரசு தோல்வியடைந்து விட்டது.

மத்தியில் அடல்பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்த போது நாட்டின் பொருளாதாரவளர்ச்சி 8.5 சதவிகிதமாக இருந்தது. ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியிலோ, அது 4.5 சதவிகிதமாக குறைந்துவிட்டது என்று நிதின்கட்கரி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...