காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க அஞ்சுகிறது என்று எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசியுள்ளார். .
டில்லியில் நடக்கும் பாஜக., தேசியசெயற்குழு கூட்டத்தில் அரசியல் ரீதியான முக்கியதீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. டில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்துவரும் இறுதி நாள் கூட்டத்தில் பாஜக., தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் அத்வானி, பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது: சமீபத்திய 5 மாநில சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் பீதியில் உள்ளது. பாஜக., அறிவித்துள்ளபடி காங்கிரஸ் பிரதமர்வேட்பாளர் யார் என்று அறிவிக்க ஏன் அஞ்சுகிறது. பிரதமர் வேட்பாளர் அறிவிக்காமல் அஞ்சி ஓடுகிறது. காங்கிரஸ் , வெளிநாட்டு கொள்கையில் இந்தியா தோல்வியடைந்துள்ளது. பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் பலர்மீது ஊழல் புகார் உள்ளன. இந்திய- பாகிஸ்தான் எல்லை பகுதியில் இந்திய ராணுவவீரர்கள் தலை கொய்யப்பட்டது. நமது எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்படும் போது மத்திய அரசு மவுனமாக இருந்துவருகிறது.
பாட்னாவில் நடந்த பாஜக, கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் வேதனையான சம்பவம். பாஜக., நிர்வாகிகளை காத்திட உரியபாதுகாப்பு அளிக்கப்படவில்லை. எங்கள் நிர்வாகிகள் யாரும் அஞ்சமாட்டோம். வரும் லோக்சபா தேர்தலில் பாஜக., அபாரவெற்றி பெறும்.
காங்கிரஸ் இந்நாட்டை கொள்ளையடித்து விட்டது. சோனியா பல்வேறுபணிகளை செய்ததாக கூறுகிறார். ஆனால் உண்மையில் இது நடக்கவில்லை. காங்கிரசுக்கு மக்கள் விரைவில் பாடம்புகட்டவுள்ளனர். 12 ஆண்டுகளுக்கு பின்னர் மோடி குற்றமற்றவர் என நீதி மன்றம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் பா.ஜ., 272 தொகுதிகளில் வெற்றிபெற்று சாதிக்கும்.இவ்வாறு சுஷ்மா பேசினார்.
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.