மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் தெலங்கானா தனிமாநில உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் ஆந்திர மறு சீரமைப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதாக மத்திய உள்துறையமைச்சர் சுஷில் குமார் ஷின்டே தெரிவித்துள்ளார். இது கறித்து அவர், ஆந்திர மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இது, அம்மசோதா மக்களவையின்சொத்து என்றார்.
இந்நிலையில் பாஜக இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது . தெலங்கான மசோதா தாக்கலானதாக கூறுவதை ஏற்க முடியாது என மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர், அவையில் மசோதா முறையாக தாக்கல் செய்யப்பட வில்லை. ஆனால் அரசுமசோதா தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக கூறுகிறது. அவையில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கல்யான் பானர்ஜியும் மசோதா தாக்கல்செய்யப்பட்டது தெரியாது என்று கூறியிருக்கிறார். இந்தமசோதா தாக்கல் செய்யப்பட்டதை நாங்கள் ஏற்கவில்லை. இது குறித்து மத்திய அரசுடன் எந்த சமரசத்தையும் நாங்கள் செய்துகொள்ள தயாரில்லை என்று தெரிவித்தார்.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.