மோடியின் கருத்துக்கு இஸ்லாமிய தலைவர்கள் பாராட்டு

 இந்திய முஸ்லிம்கள் அல்காய்தா தீவிரவாத இயக்கத்தினரின் தாளத்திற்கு ஆட மாட்டார்கள் அவர்கள் இந்தியராகவே வாழ்ந்து, மறைவார்கள்.அல்காய்தா இயக்கத்தினர் இந்திய முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்துவருகின்றனர். எனவே, இந்திய முஸ்லிம்கள் அவர்களுக்கு ஆதரவாக செயல் படுவார்கள் என அல்-காய்தாவினர் நினைத்தால் அது

வெறும் மாயத் தோற்றமே. இந்திய முஸ்லிம்கள் தேசத்திற்கு எதிராக ஒரு போதும் செயல்பட மாட்டார்கள் என்று தனியார் தொலைக் காட்சி ஒன்றிற்கு பிரதமர் நரெந்திர மோடி அளித்த பேட்டியில கூறி இருந்தார்.

மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு முஸ்லீம் தலைவர்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். லவ்ஜிகாத் என்று குற்றம் சாட்டி வருபவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமரின் கருத்து அமைந்துள்ளது. பிளவை உருவாக்க முயற்சி செய்பவர்களுக்கு பிரதமர் மோடி தகுந்தபதிலடி கொடுத்துள்ளார் என்று இஸ்லாமிய மதகுரு முப்தி முகாரம் தெரிவித்தார்.

ஷாபார் சரேஷ் வாலா என்ற மற்றொரு முஸ்லீம் தலைவர் கூறுகையில், முஸ்லீம்கள்மீது மோடி நம்பிக்கை வைத்துள்ளார். முஸ்லீம்கள் பற்றிய மோடியின் இந்த எண்ணம் புதிதல்ல. நாங்கள் ஏற்கனவே அவரைபற்றி அறிந்து இருக்கிறோம். தற்போது ஒட்டுமொத்த உலகமும் அவரை பற்றி தெரிந்துகொண்டுள்ளது. முஸ்லீமகள் குறித்து மோடியின் பார்வையை சந்தேகத்திவர்களுக்கு இது பதிலடிகொடுக்கும் விதமாக அமைந்துள்ளது என்றார்.

பாரதீய ஜனதா தலைவர் ஷனாவாஷ் ஹூசைன் கூறுகையில், சிறுபான்மையினர் குறித்த கட்சியின் கருத்தைதான் மோடி தெரிவித்துளார். மோடியின் அறிக்கை மிகவும் நன்றாக இருந்தது. இந்திய முஸ்லீம்கள் எப்போதும் இந்தியாவுக்காத் தான் வாழ்வார்கள் , தேசத்துக்காகத் தான் முடிவார்கள். கார்கில் போரில்கூட நாம் இதை பார்த்தோம். நாங்கள் சிறுபான்மையினருடன் உள்ளோம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...