அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையின் போது தாக்குதல்களை நடத்த பயங்கரவாத அமைப்புகள் சதி

 அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையின் போது இந்தியாவில் பல இடங்களிலும் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் மற்றும் உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகள் திட்ட மிட்டுள்ளதாக இந்தியா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளுமே எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்திய குடியரசு தினம் ஜனவரி 26ம்தேதி கொண்டாடப்படுகிறது. 2015ம் ஆண்டு குடியரசு தினத் தன்று அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார்.

இந்திய , அமெரிக்க நல்லுறவை கெடுக்க பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இதொய்பா, அந்த நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் முயற்சிசெய்ய திட்டமிட்டுள்ளது என்று இந்திய உளவுத் துறை சில நாட்கள் முன்பு எச்சரிக்கை பிறப்பித்தது.

இந்நிலையில் அமெரிக்காவும் தற்போது ஒரு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்தவாரம், ஒற்றை மனிதன் நடத்திய தாக்குதலை போல இந்தியாவிலும் தனித் தனி நபர்கள் ஆங்காங்கு தாக்குதலில் ஈடுபடலாம், குறிப்பாக அமெரிக்க பிரஜைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதர கங்களும் குறிவைக்கப் படலாம் என்பதால், அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப் படுத்துமாறு இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கைவிடுத்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...