இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்னணு பொருட்களையே வாங்கவேண்டும்

 அனைத்து அமைச் சகங்களும், துறைகளும் அரசு கொள்முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்னணு பொருட்களையே வாங்கவேண்டும் என்று பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் ஆட்சியமைந்த பின்னர் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இந்தியாவில் பொருட்களின் உற்பத்தியை பெருக்குவதற்காக 'இந்தியாவில் தயாரிக்கப்பட்டது' (மேக் இன் இந்தியா) என்ற புதியதிட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இந்த திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் அலுவலகம் ஒருபுதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் அரசு கொள்முதலாக மின்னணுபொருட் களை வாங்கும் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதையே வாங்கவேண்டும். அப்படி வாங்கப்பட்ட பொருட்கள் விவரத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கையாக வெளியிட வேண்டும். அரசு செயலாளர்கள் அடங்கியகுழு இந்த முடிவை எடுத்துள்ளது.

உள்நாட்டில் மின்னணு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்காக மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்ப துறை ஏற்கனவே வெளியிட்டுள்ள மாதிரி ஒப்பந்தத்தை அனைத்து துறைகளும் மின்னணு பொருட்கள் கொள்முதலின் போது கடைபிடிக்க வேண்டும். அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மாநில அரசுகள் மின்னணு பொருட்கள் கொள்முதல் குறித்து வெளியிடும் அறிக்கைகளை கண்காணிப்பதற்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை ஒரு ஆன்-லைன் கண்காணிப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

இதன்மூலம் 15 நாட்களுக்கு ஒருமுறை கண்காணித்து எந்தெந்த துறைகள் எவ்வளவு உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை வாங்கியிருக்கிறார்கள் என்பதை அதன்மதிப்பில் தெரிவிக்க வேண்டும்.
என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...