வெகுஜனங்களின் ஆலோசனைகளை கேட்டு அதை அமல்படுத்த முயலும் பிரதமர்

 பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற பின்னர் 'மான் கி பாத்' என்ற பெயரில் வானொலிமூலம் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றத் தொடங்கினார். அப்போது அவர், நாட்டின் முன்னேற் றத்துக்கு தேவையான திட்டங்கள் குறித்து பொதுமக்களின் யோசனைகளை விருப்பமுடன் வரவேற்று வருகிறார்.

இதைக் கேட்ட சண்டிகாரை சேர்ந்த ராம்தாஸ் சிங்கால் என்ற வியாபாரி, 5 ரூபாய்நோட்டு மற்றும் நாணயத்தின் தட்டுப்பாட்டினை போக்குகிற வகையில் 25 ரூபாய் நோட்டினை வெளியிடலாம் என பிரதமர் நரேந்திரமோடிக்கு யோசனை தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சந்தையில் 10 ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் ஏராளமாக உள்ளன. எனவே 10 ரூபாய், 20 ரூபாய் என கொடுப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் 5 ரூபாய்க்கு தட்டுப்பாடு உள்ளது. எனவே 25 ரூபாய் நோட்டு வெளியிடலாம் என பிரதமருக்கு யோசனை தெரிவித்துள்ளேன். 20 ரூபாய் நோட்டுக்கு பதிலாகக்கூட 25 ரூபாய் நோட்டை வெளியிடலாம்.

5 ரூபாய் தர வேண்டிய ஒருவர் 25 ரூபாய் நோட்டை கொடுத்தால் எளிதாக மீதி 20 ரூபாயை இரண்டு 10 ரூபாய் நோட்டுகளாக கொடுத்து விடுவோம். அதே போன்று 15 ரூபாய் தருவதற்கு 25 ரூபாய் தந்தாலும் மீதி 10 ரூபாய் எளிதாக தந்துவிட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் புத்தாண்டு நாளில் அகில இந்திய வானொலியிலிருந்து, ராம்தாஸ் சிங்காலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அதில், 25 ரூபாய் நோட்டுவெளியிட வேண்டும் என்ற இவரது யோசனையை பிரதமர் மோடி விரும்பி, இதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனவே 25 ரூபாய்நோட்டு வெளியிடும் யோசனையை ரிசர்வ் வங்கி பரிசீலித்து, ஏற்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படி 25 ரூபாய் நோட்டினை வெளியிடுகிறபோது, 5 ரூபாய் சில்லறை தட்டுப்பாடு பெருமளவு நீங்கிவிட வாய்ப்பு இருக்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...